December 6, 2025, 5:03 PM
29.4 C
Chennai

நாக்பூரில் சரஸ்வதி ஹோமம்!

saraswathi-homam-in-nagpur
saraswathi-homam-in-nagpur

பக்தி என்னும் பாவத்தை வெளிப்படுத்துவதற்கு பக்தர்களுக்கு ஒன்றுசேர்ந்த மனம் இருந்தாலே போதும். பக்தர்களுக்கு தங்களின் இஷ்டமான தெய்வங்களை வழிபட மொழி, இனம், இடம் என எந்த பாகுபாடும் கிடையாது. பக்தி பாவமே தேவை என்பதை மீண்டும் ஒருமுறை நாக்பூரில் உள்ள ஆன்மீக அன்பர்கள் வெளிப்படுத்தி யுள்ளனர்.

நாக்பூரில் பகவத் பாத சபாவினால் நிர்வகிக்கப்படும் சர்வேஸ்வர தேவாலயாவில் சரஸ்வதி ஹோமமும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு அபிஷேகமும் என சிறப்பான நிகழ்வுகள் திரளான பக்தர்களின் பங்கேற்போடு நடைபெற்றது.

K. ஜெகதீஸன் (நிர்வாக உறுப்பினர், பகவத் பாத சபா மற்றும் ஒருங்கிணைப்பாளர், காஞ்சி காமகோடி கைங்கர்யம்) கூறுகையில் “சர்வேஸ்ர தேவாலயம், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் வழிகாட்டலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நாக்பூரில் ஆன்மீகத்தை தழைத்தோங்கச் செய்வதில் ஸ்ரீ சர்வேஸ்ர தேவாலயாவின் பங்கும் உள்ளது.

saraswathi-homam-in-nagpur1-horz
saraswathi-homam-in-nagpur1-horz

மாணவ மாணவியர் வரும் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு அணுகவும், தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும் இன்று கோவிலில் சரஸ்வதி ஹோமமும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. இன்றைய ஆன்மீகச் சடங்குகளை மணிகண்ட சிவாச்சாரியார், ஜெகதீசன் சிவாச்சாரியார் மற்றும் சர்வேஸ்வர சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்புடன் செய்து வைத்தனர், ” என்றார்.

வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீீீீமஹி
தன்னோ வாணி ப்ரசோதயாத்
என்ற சரஸ்வதி காயத்ரீ மந்திரத்தை ஜபித்து சரஸ்வதி ஹோமத்தில் பக்தர்கள் பெரு மகிழ்வுடன் கலந்து கொண்டனர்.

ஒரு கையில் புத்தகத்துடனும், ஒரு கையில் வீணையுடன் கம்பீரமாக வீற்றிருந்த சரஸ்வதி தேவியினை தமிழர்களுடன் சேர்ந்து உள்ளூர் மக்களும் வழிபட்டு மகிழ்ந்தனர். மாணவ, மாணவிகள் பலர் தங்கள் தேர்வு அனுமதிச் சீட்டுகளை ( Hall Ticket) சரஸ்வதி தேவியின் பாதத்தில் வைத்து தங்கள் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர். சரஸ்வதி ஹோமம் முடிந்தவுடன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

K. ஹரிஹரன், தலைவர், பகவத் பாத சபா மற்றும் டிரஸ்டி, ஸ்ரீ ருக்மணி- பாலாஜி மந்திர், பாலாஜுபுரம், பேதூல் ( ம.பி), K.V. கணேசன், பொருளாளர், K. ஜெகதீசன், நிர்வாக உறுப்பினர், P.B.S. மணியன், நிர்வாக உறுப்பினர், S. ராதாகிருஷ்ணன், ஆயுட்கால உறுப்பினர், K. சதாசிவன், செயலாளர், சௌத் இண்டியன் அசோஸியேஷன், T. ராஜகோபாலன், ஆயுட்கால உறுப்பினர், R. ஜெயராமன், நிர்வாக குழு உறுப்பினர், சௌத் இண்டியன் எஜூகேஷன் சொசைட்டி, சண்முக சுந்தரம், மடப்பள்ளி பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களின் உதவியுடன் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

  • ஜெயஸ்ரீ எம். சாரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories