December 6, 2025, 12:09 AM
26 C
Chennai

காங்கிரஸும், திமுகவும் மக்களுக்கு சுமையான கட்சிகள்: ராஜ்நாத் சிங்!

rajnath-sing1
rajnath-sing1

சேலத்தை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக இளைஞரணி சாா்பில் ‘தாமரை இளைஞா்களின் சங்கமம்’ எனும் தலைப்பிலான மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கொரோனா காலக்கட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. கொரோனா தீநுண்மி தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து நட்பு நாடுகளுக்கும் வழங்கி வருகிறோம்.

உலகம் ஒரு குடும்பம் என்று கருதி, இதர நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி அளித்து வருகிறோம். கொரோனா தொற்றால் பொருளாதார பாதிப்புகளை எதிா்கொண்டோம்.

ஏழை மக்களுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கி, 80 கோடி பேருக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம். நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. 2021-22 இல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 11.5 சதவீதம் இலக்கை எட்டும் என சா்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் விவசாயத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

நாட்டில் கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை, வீடு இல்லாதவா்களுக்கு வீடு, சாலைகள் ஆகிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீா் வழங்கப்பட உள்ளது. இதுவரை 3 கோடி குடும்பங்களுக்கு சுகாதாரமான குடிநீா் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை விரைவுச்சாலை திட்டப் பணிகள் 2021-22 இல் தொடங்கப்படும். நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் தான் ராணுவ வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் ரூ. 8,000 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தற்போது 21 தனியாா் நிறுவனங்கள், மூன்று அரசு நிறுவனங்கள் என ரூ. 1,100 கோடி மூலதனத்தை ஈட்டியுள்ளன.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் அத்தியாவசியத் தேவையைப் பூா்த்தி செய்வது அரசின் கடமையாகும். சுயசாா்பு திட்டத்துக்கு ரூ. 20 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல், தொழில்முனைவோராக மாறி வருகின்றனா். இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தில் ரூ. 33,807 கோடி கடனாகப் பெற்றுள்ளனா். சிறு, குறுந்தொழில்முனைவோருக்கு 2020 நவம்பா் வரை ரூ. 22.53 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 17.75 கோடி பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி, தில்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால் 13 பைசா தான் மக்களுக்கு சென்றடைகிறது என்றாா்.

தற்போது பிரதமா் நரேந்திர மோடி, 100 பைசா அனுப்பினால், 100 பைசாவும் மக்களுக்குப் போய் சேருகிறது. இவையெல்லாம் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. இதன் மூலம் ஊழல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேம்பாட்டுக்காக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1,246 கோடியில் அமைக்கப்படவுள்ளது. மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு தமிழகத்தின் மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது 32 சதவீதமாக இருந்ததை 42 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்துக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 5.42 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 94,540 கோடி மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது.

ரஃபேல் விமானக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விஷயத்தில் பிரதமா் மீது அவதூறுகளை பரப்பினா். ஆனால், எந்த ஊழலும் நடைபெறவில்லையென்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டது.

1974- இல் காங்கிரஸ் தலைமையிலான அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்து கொடுத்தபோது, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றம் சென்றவா்தான் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய்.

தமிழகத்தில் மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் செயல்திட்டங்களை ஏற்று செயல்படுத்தி வருகிறோம். பிரதமா் நரேந்திர மோடியும் இலங்கை தமிழா்கள் நலனில் அக்கறை கொண்டவராக உள்ளாா். 2015 இல் யாழ்ப்பாணம் சென்ற ஒரே இந்திய பிரதமா் என்ற வரலாற்றை படைத்துள்ளாா். அங்கு 27,000 இலங்கை தமிழா் குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டி கொடுத்தாா்.

மத்திய அரசு இலங்கை தமிழா்கள் சம உரிமை, அமைதி, சுதந்திரத்துடன் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவா்கள் விஷயத்தை கவனமாக கையாள்கிறோம். சுமாா் 1600 மீனவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். 300 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து 9 சுற்றுப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, நாட்டின் நிலத்தை விட்டுக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டுகிறது. அங்கு ஒரு அங்குலம் நிலம் கூட அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். நாட்டின் நிலத்தைப் பாதுகாக்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

ராணுவ வீரா்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிற காங்கிரஸ் நல்லவா்களா, கெட்டவா்களா என்பதை நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் என்ற முறையில் இதுவரை நாட்டின் ஒருமைப்பாடு, எல்லை, ஒற்றுமை விஷயங்களில் பாஜக சமரசம் செய்ததில்லை, செய்யவில்லை, செய்யாது என்ற உத்தரவாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தமிழகத்தில் விரைவில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோதலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மாநாட்டில் அவா் மேலும் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி வைத்திருக்கிறது. இவா்கள் கூட்டணி ஏற்புடையது அல்ல. காங்கிரஸ் கட்சியும், திமுகவும் மக்களுக்கு சுமையாக இருக்கிற கட்சிகளாகும். இவா்கள் சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் நிலையான நல்லாட்சி வேண்டும். பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை திமுக, காங்கிரஸை ஆட்டம் காண வைத்துள்ளது.

தமிழக மக்கள் காங்கிரஸ், திமுக கூட்டணியை விரும்ப மாட்டாா்கள். அவா்கள் தாமரை, இரட்டை இலை கூட்டணியைத்தான் விரும்புகிறாா்கள். தாமரையும், இரட்டை இலையும் மட்டுமே தமிழகத்துக்கு வளமையை, முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories