அலைபாயுதே ஸ்டைலில் ஓராண்டுக்கு முன்னரே நடந்த திருமணம்! கிறிஸ்டோபரின் காதல் வலை!

marriage 5 - 2026

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பள்ளி மாணவி காதல் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சமூக வலைத்தளத்தில் பள்ளி மாணவிக்கு இளைஞர் கோவிலின் பின்புறத்தில் உள்ள முட்டுசந்திற்குள் வைத்து மஞ்சள் தாலி கட்டுவது தொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த விடியோவை கண்ட நீலகிரி மக்கள், இந்த கோவில் எங்களின் பகுதியில் உள்ளது என்றும், மாணவி அணிந்திருந்த சீருடை இங்குள்ள பள்ளியில் உள்ளது என்றும் தெரிவித்து குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், குறித்த மாணவி கடந்த வருடத்தில் பத்தாம் வகுப்பு படித்தார் என்பதும், தற்போது அவர் பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

marriage 1 1 - 2026

இதனையடுத்து மாணவிக்கு தாலிகட்டிய தொடர்பாக விசாரணை செய்கையில், அவன் குன்னூர் கொலைக்கம்பை பகுதியில் உள்ள கிளிஞ்சிடா பகுதியை சார்ந்த கிறிஸ்டோபர் (வயது 23) என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காதலனை கைது செய்து விசாரணை செய்கையில், ” பள்ளி மாணவியை நான் காதல் வலையில் வீழ்த்தினேன். எனது வலையில் விழுந்த மாணவியும் என்னை காதலித்து வந்தார்.

இந்த காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் உடனடியாக திருமணம் செய்யலாம் என்று கூறிய எனது வார்த்தையை நம்பி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனை எனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி நல்லநாள் மற்றும் நல்லநேரம் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது கோவிலில் மற்றொரு நிகழ்ச்சி நடப்பது எங்களுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியை சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதுபோல புறப்பட்டு வரச்சொல்லி கோவிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு மங்கள இசை கோவிலுக்குள் முழங்க, நான் கோவிலின் பின்புறம் உள்ள மறைவு சந்துப்பகுதியில் வைத்து மாணவிக்கு மஞ்சள் கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்த மஞ்சளை வைத்து தாலிகட்டிட்டேன்.

மாணவி பின்னர் வீட்டிற்கு சென்று அலைபாயுதே பாணியில் வீட்டில் சமாளித்து வந்த நிலையில், மாணவியின் நடவடிக்கையில் உள்ள சந்தேகத்தை கவனித்த பெற்றோர் அவளின் கழுத்தில் மஞ்சள் தாலி இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து மாணவியை திருச்செங்கோட்டுக்கு அழைத்து சென்றுவிட்ட நிலையில், அவர்கள் அங்கு சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது.

கடந்த வருடம் எடுத்த வீடியோ காட்சியை எனது நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிட்டனர். இதனால் நான் சிக்கிக்கொண்டேன் ” என்று தெரிவித்துள்ளான்.

குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கிறிஸ்டோபரை சிறையில் அடைத்தனர். மேலும், மாணவியை கண்டறிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

சில அரசியல்வாதிகள் இந்த செயல்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கும் போது இவை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories