மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து செல்போன் திருட்டு!

theft couple - 2026

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் படுத்திருந்து செல்போனை திருடிச் சென்ற இளைஞர் மற்றும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திராநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் மணிகண்டன் உதவியாக தங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகளின் உறவினர் போல் 2 பேர் படுத்திருந்தனர். அதன்பின் அவர்கள் இருவரும் மணிகண்டனுடைய செல்போனை திருடினர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய காவல் துறையினரின் உதவியுடன் செல்போன் திருடிய இளைஞர் மற்றும் இளம்பெண்ணை பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞர் வேப்பந்தட்டை தாலுகாவில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் முரளி என்பது தெரியவந்தது.

மேலும் அந்த இளைஞருக்கு சென்னை குன்றத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்த போது மதுரை மாவட்டம் விக்கிரவாண்டி கிராமத்தில் வசித்து வரும் சுரேசின் என்பவரது மகள் நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நந்தினியை, முரளி பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை பார்க்க வந்தது போல் நடித்து மணிகண்டனின் செல்போனை திருடியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த மணிகண்டனின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இரண்டு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories