மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து செல்போன் திருட்டு!

theft couple - 2026

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் படுத்திருந்து செல்போனை திருடிச் சென்ற இளைஞர் மற்றும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திராநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் மணிகண்டன் உதவியாக தங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகளின் உறவினர் போல் 2 பேர் படுத்திருந்தனர். அதன்பின் அவர்கள் இருவரும் மணிகண்டனுடைய செல்போனை திருடினர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய காவல் துறையினரின் உதவியுடன் செல்போன் திருடிய இளைஞர் மற்றும் இளம்பெண்ணை பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞர் வேப்பந்தட்டை தாலுகாவில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் முரளி என்பது தெரியவந்தது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

மேலும் அந்த இளைஞருக்கு சென்னை குன்றத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்த போது மதுரை மாவட்டம் விக்கிரவாண்டி கிராமத்தில் வசித்து வரும் சுரேசின் என்பவரது மகள் நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நந்தினியை, முரளி பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை பார்க்க வந்தது போல் நடித்து மணிகண்டனின் செல்போனை திருடியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த மணிகண்டனின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இரண்டு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories