மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து செல்போன் திருட்டு!

theft couple - 2026

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் படுத்திருந்து செல்போனை திருடிச் சென்ற இளைஞர் மற்றும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திராநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் மணிகண்டன் உதவியாக தங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகளின் உறவினர் போல் 2 பேர் படுத்திருந்தனர். அதன்பின் அவர்கள் இருவரும் மணிகண்டனுடைய செல்போனை திருடினர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய காவல் துறையினரின் உதவியுடன் செல்போன் திருடிய இளைஞர் மற்றும் இளம்பெண்ணை பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞர் வேப்பந்தட்டை தாலுகாவில் வசித்து வரும் கண்ணன் என்பவரது மகன் முரளி என்பது தெரியவந்தது.

மேலும் அந்த இளைஞருக்கு சென்னை குன்றத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்த போது மதுரை மாவட்டம் விக்கிரவாண்டி கிராமத்தில் வசித்து வரும் சுரேசின் என்பவரது மகள் நந்தினியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நந்தினியை, முரளி பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை பார்க்க வந்தது போல் நடித்து மணிகண்டனின் செல்போனை திருடியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த மணிகண்டனின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இரண்டு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories