பலமாக வீசிய காற்றால் கோவில் வாயிற்கதவு இடித்து பணியாளர்கள் காயம்!

accident
accident

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நுழைவாயில் கதவை திறக்கும்போது, திடீரென ஏற்பட்ட விபத்தில் கோயில் ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயியில் கடந்த மார்ச் 18ம் தேதி பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 28ம் தேதி திருக்கல்யாணத்துடன் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.

இதை தொடர்ந்து வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. இந்நிலையில் நேற்று காலை காஞ்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

அபபோது, ஏகாம்பரநாதர் கோயிலின் தெற்கு கோபுரம் கதவை திறக்க கோயில் ஊழியர்கள் தியாகராஜன், லட்சுமி அம்மாள் ஆகியோர் சென்றனர்.

அவர்கள், அங்கிருந்த பக்தர்கள் 3 பேர் உதவியுடன் கதவை திறந்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது பலத்த காற்று வீசியதால் கதவு வேகமாக திரும்பி வந்து அவர்கள் மீது இடித்தது.

இதில் கோயில் காவலாளி தியாகராஜன், ஊழியர் லட்சுமி அம்மாள், பக்தர்கள் 3 பேர் காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர், காற்றின் வேகத்தில் கதவு அங்கும் இங்குமாக ஆடியது. உடனே அங்கிருந்தவர்கள், பெரிய கருங்கல்லை வைத்து, கதவை நிறுத்தினர்.

காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து லட்சுமி அம்மாள் , மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். புகாரின்படி சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories