பேஸ்புக் மூலம் நட்பு.. உறவு முடிந்து நகை பறிப்பு! ‘ஆண்டி’பாய்ஸ் அட்டூழியம்!

Andi hero
Andi hero

முகநூல் மூலமாக திருமணமான பெண்களை குறிவைத்து தனிமையில் உறவில் இருந்து நகைகளை திருடும் ரோமியோக்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிராமம் கடுவனூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் உமைபாலன் மனைவி பாலின் ராணி (வயது 36). இவரது கடைக்கு துணி வாங்க வந்த மர்ம நபர் ஒருவர் பாலின் ராணி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி அன்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தினர். இது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜி.கே.

ராஜு அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் அன்பழகன், தலைமை காவலர்கள் சிவஜோதி, வீரப்பன், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

Andi hero 1
Andi hero 1

தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் விலை உயர்ந்த காரில் வந்த நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் காரின் பதிவெண் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

விசாரணையில் அந்த கார் பழனி கோதைமங்களம் பகுதியை சேர்ந்த விஸ்வாசகுமார் என்பவரது இரண்டாவது மகன் மனோஜ்குமார் (வயது 25) என்பவரது பெயரில் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் மனோஜ்குமாரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. மனோஜ்குமார் கடந்த ஆறு மாதத்திற்கு முன் முகநூல் வாயிலாக பாலின் ராணியுடன் முகநூல் நண்பராக பழகி உள்ளார்.

Andi hero3
Andi hero3

பின்னர் பாலின் ராணியை நேரில் சந்திக்க பழனியில் இருந்து காரில் வந்த மனோஜ் கடுவனூர் பகுதியில் உள்ள பாலின் ராணியின் துணிக்கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உள்ளனர். அப்போது பாலின் ராணியின் கழுத்தில் அணிந்து இருந்த நான்கரை சவரன் நகையை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.

பின்னர் இது குறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று பாலின் ராணி கொடுத்த புகார் அளித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

பின்னர் தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணை தீவரபடுத்தினர். அவர்களது விசாரணையில் மனோஜ் குமார் மொபைல் போனை ஆய்வு செய்தனர்.

அதில் கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்களிடம் முகநூல் வாயிலாக நட்பாக பழகி, பின்னர் பாலியலில் ஈடுபட்டு கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.

இதில் ஒருவர் கூட இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்காத காரணத்தால் இந்த ஆண்ட்டி ரோமியோக்கள் சிக்காமல் சுற்றி வந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மனோஜ்குமாரை கைது செய்த போலீசார் இந்த குற்ற செயலுக்கு அவருடன் உறுதுணையாக இருந்த அவரது நண்பர் பழனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் கெளதம் (வயது 27) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மனோஜ் குமாரிடம் இருந்து 2 லட்சம் ரொக்கம், 10 சவரன் தங்க நகை ஆகியவற்றை தனிப்படை போலீசார் மீட்டனர்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

மேலும் இந்த லீலை செயல்களுக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த XUV 500 கார் மற்றும் R15 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories