tnsecretariat
tnsecretariat

கொரோனா பெருந்தொற்று பரவலை சமாளிக்க, வரும் 6ம் தேதி முதல், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

வருகிற 6-ந் தேதி முதல் தமிழகத்தில், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது…

நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பதற்கு அனுமதி.

வரும் 20 ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

அழகு நிலையங்கள் செயல்பட தடை.

பேருந்துகளில் 50 சதவிகிதம் இடங்களில் அமர்ந்து பயணிக்க உத்தரவு.

இறைச்சி கடைகள் சனி, ஞாயிறு கிடையாது. பிற நாட்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12மணி வரை இயங்க அனுமதி.

விழாக்கள் நடத்த தடை. இறுதி சடங்கில் 20 பேர் மட்டும் அனுமதி.
அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.

மளிகை, தேநீர், மற்றும் காய்கறி கடைகள்
பகல் 12 மணிவரை மட்டும் செயல்பட வேண்டும். இதர கடைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

கல்வி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தியேட்டர்கள் மூட்டப்ட்டிருக்கும்.
அரசியல் மற்றும் விளையாட்டு விழாக்களுக்கு தடை.

பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்பட அனுமதி.

டீக்கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதி.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்கள் கொண்டு செயல்படும்

வருகிற 20-ந் தேதி அதிகாலை 4 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

முழுமையான தகவல்களுக்கு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending