January 18, 2025, 5:00 AM
24.9 C
Chennai

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்பனை: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ!

madurai hospital 1
madurai hospital 1

மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ரெம்டெசிவர் விற்பனை மையத்தில் ரெம்டெசிவர் மருந்து பெட்டிகளை அங்குள்ள ஊழியர்கள் மூலமாக குப்பைதொட்டியில் போட்டுவிட்டு அதனை வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மருந்துபெட்டி ஒன்று 50ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அவலத்தை மருந்து வாங்க காத்திருந்த நோயாளி ஒருவர் முறைகேடுகள் நடைபெறும் இடத்தில் சென்று வீடியோ பதிவுசெய்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெம்டெசிவர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இந்த மருந்து விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நேற்று முதல் மதுரை விற்பனையகத்தில் ரெம்டெசிவர் டோக்கன் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தநிலையில் தற்போது முறைகேடு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 6வயால்கள் கொண்ட ஒரு பெட்டி ரெம்டெசிவர் மருந்து சுமார் 50ஆயிரம் ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விழா தொடக்கம்!

ஏற்கனவே மருந்துகளை பெறுவதற்கான டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது வெளியான வீடியோவால் முறைகேடு உறுதியாகியுள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை