செவ்வாய் கிரகத்தில் ஆர்க்டிக் கடல் அளவுக்கு ஆழமான கடல் இருந்தது: நாசா விஞ்ஞானிகள்

Published:

mars-nasaவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்தது என்று ஏற்கெனவே கடந்த சில வருடங்களாகக் கூறி வந்த நிலையில், புதிய தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை உறுதியாகக் குறிப்பிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், 6 வருட ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய ஆழமான கடல் இருந்தது என்ற முடிவினை அறிவித்தது. செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்திருக்கலாம் என்று முன்னதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய ஆய்வில், இந்தக் கடலானது ஆர்க்டிக் கடல் அளவுக்கு பெரியதாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை உறுதிசெய்யும் வகையில் ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் தாழ்வான பகுதியில் கடல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கடலானது ஆர்க்டிக் கடல் அளவுக்கு பெரிதாக, ஆழமாக இருந்திருக்கலாம் என நாசா கூறுகிறது. செவ்வாய் கிரகத்தின் வட பகுதியின் அடித்தளத்தில் இந்தக் கடலானது பல பலட்சம் ஆண்டுகள் இருந்ததாம். இது உண்மையாக இருக்குமானால், பூமியைப் போலவே செவ்வாயிலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் இருந்திருக்கலாம் என்று அனுமானிக்கலாம். இதுவரை இதற்கான உரிய ஆதாரம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளதால் கடல் இருந்தது என்று முதல் முறையாக நாசா கூறியுள்ளது. இதனை நாசாவின் மிக்கேல் மும்மா கூறியுள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img