நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்

Published:

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் ரவி (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி லதா (42). கடந்த 2013ம் ஆண்டு மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு ரவி அவரை கத்தியால் குத்திகொலை செய்துள்ளார். தடயத்தை மறைப்பதற்காக தீ வைத்து எரித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ரவி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மனைவியை கொன்ற ரவிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி நஷீர் அகமது தீர்ப்பு கூறினார்.

Related articles

Recent articles

spot_img