நாகர்கோவில்: ”தி.மு.க.,வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது உண்மை. காரணம் அந்தக் கட்சியில் இருப்பவர்களே அதை அழிக்கத் துவங்கி விட்டார்கள்,” என்றார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். நாகர்கோவிலுக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது 100 சதவீத உண்மை. தி.மு.க.வை அந்த கட்சியில் உள்ளவர்களே அழித்து விடுவர் . அது ஆரம்பித்து விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் நல்ல முதல்வர் கிடைக்கவில்லை. 2016 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை பா.ஜ. எதிர்கொள்ளும். மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது. இலங்கையில் இருந்து 554 மீனவர்களும் பிறநாடுகளில் இருந்து 124 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் ரயில் பாதை வந்த காலம் முதல் மதுரை கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை கோரிக்கை இருந்து வருகிறது. மோடி அரசு பொறுப்பேற்ற பின் ரூ.2500 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குளச்சல் வர்த்தக துறைமுகம் ஆய்வுப்பணி நடைபெறுகிறது. இதனால் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்று கூறினார்.
திமுக.,வை அழிக்க வேறு யாரும் வேண்டாம்; அவர்களே துவங்கிவிட்டார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
Popular Categories



