29-03-2023 10:20 AM
More
    Homeஅடடே... அப்படியா?அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம்: மீண்டும் ‘மாஃபா’ பாண்டியராஜன் ஆனார்!

    To Read in other Indian Languages…

    அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம்: மீண்டும் ‘மாஃபா’ பாண்டியராஜன் ஆனார்!

    mafoi pandiarajan - Dhinasari Tamil

    அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தொழிலில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

    அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் ‘மாஃபா’ என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அமைச்சரான பின் தன் வணிகப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.

    கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனால் விரக்தி அடைந்த அவர், மீண்டும் தன் வணிகப் பொறுப்புகளை தொடர முடிவு செய்துள்ளார்.

    தற்போது அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலராக உள்ள மாஃபா பாண்டியராஜன், மாஃபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இது குறித்து அவர் குறிப்பிட்ட போது, ‘மாஃபா’ மனிதவள நிறுவனம் ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால் நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல் தீவிர அரசியலில் ஈடுபட்டேன். தற்போது தொழிலை கவனிக்க முடிவு செய்து பொறுப்பேற்றுள்ளேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்துவேன்.

    சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக அரசியலுக்கு சற்று ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில் அ.தி.மு.க.,வில் பொறுப்புகளை தொடர்கிறேன் என்றார்…

    கே.பாண்டியராஜன் அறிவிப்புக்கும், நிறுவனங்களின் பொறுப்பை மீண்டும் ஏற்றதற்கும் அவரது டிவிட்டர் பதிவுகளில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய தெலங்காணா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தராஜனின் கணவரும் சிறந்த மருத்துவருமான டாக்டர் சௌந்தர்ராஜனும் தனது வாழ்த்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    1 × 5 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...