என்னடா நடக்குது..? தடுப்பூசி: 2 ஆம் டோஸ் போட்டதாக வரும் எஸ்எம்எஸ்! குழப்பத்தில் மக்கள்!

vaccine - 2026

கடலுார் மாவட்டத்தில் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

மாவட்டத்தில் இது வரை தகுதியான 22 லட்சம் பேரில் நேற்று வரை 15 லட்சத்து 15 ஆயிரத்து 929 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 11லட்சத்து 73 ஆயிரத்து 473 பேர் முதல் தவணையும், 3 லட்சத்து 42 ஆயிரத்து 456 பேர் இரண்டாவது தவணையும் செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

கடந்த மாதம் 12ம் தேதி நடந்த முகாமில், 88 ஆயிரத்து 190 பேர், 19ம் தேதி 55 ஆயிரத்து 92 பேர், 29ம் தேதி 1லட்சத்து 15ஆயிரத்து 590 பேர், கடந்த 3ம் தேதி நடந்த முகாமில் 71 ஆயிரத்து 155 பேர் உட்பட 4 வாரங்களாக நடத்திய முகாம்களில் மட்டுமே 3 லட்சத்து 30ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது வரை இரண்டாவது தவணை 3 லட்சத்து 42 ஆயிரத்து 456 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.

இரண்டாவது தடுப்பூசிக்கான காலக்கெடுவை எதிர்பார்த்து பலர் காத்திருந்த நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தியதாக மொபைலில் எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள், சுகாதாரத்துறையில் கேட்டதற்கு, அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக மழுப்பலாக பதில் கூறி அனுப்பி வருகின்றனர்.

இப்பிரச்னை கடந்த வாரம் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம் என, மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

இதனால், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியுமா என, பலரும் குழப்பமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் இலக்கை அதிகப்படுத்தி காட்டுவதற்காக, இவ்வாறு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பொது மக்கள் கூறுகையில், நாங்கள் ஆதார் நகல் மற்றும் மொபைல் எண் கொடுத்து முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்.

இதற்கிடையே 2வது தவணை செலுத்துவதற்கான நாட்கள் நெருங்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே மொபைல் போனிற்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.

இதனால் நாங்கள் உண்மையாகவே 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கின்றனர்.

எனவே, எங்களுக்கு முறையாக 2வது தவணை தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர். இப்பிரச்னை தொடர்பாக சுகாதாரத்துரை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்டத்தில் பலருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வந்ததாக புகார் எழுந்துள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இது எதனால் ஏற்பட்ட தவறு என, விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., வந்திருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் எந்த தடையும் இருக்காது, என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories