December 6, 2025, 9:55 AM
26.8 C
Chennai

என்னடா நடக்குது..? தடுப்பூசி: 2 ஆம் டோஸ் போட்டதாக வரும் எஸ்எம்எஸ்! குழப்பத்தில் மக்கள்!

vaccine - 2025

கடலுார் மாவட்டத்தில் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

மாவட்டத்தில் இது வரை தகுதியான 22 லட்சம் பேரில் நேற்று வரை 15 லட்சத்து 15 ஆயிரத்து 929 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 11லட்சத்து 73 ஆயிரத்து 473 பேர் முதல் தவணையும், 3 லட்சத்து 42 ஆயிரத்து 456 பேர் இரண்டாவது தவணையும் செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்கள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

கடந்த மாதம் 12ம் தேதி நடந்த முகாமில், 88 ஆயிரத்து 190 பேர், 19ம் தேதி 55 ஆயிரத்து 92 பேர், 29ம் தேதி 1லட்சத்து 15ஆயிரத்து 590 பேர், கடந்த 3ம் தேதி நடந்த முகாமில் 71 ஆயிரத்து 155 பேர் உட்பட 4 வாரங்களாக நடத்திய முகாம்களில் மட்டுமே 3 லட்சத்து 30ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது வரை இரண்டாவது தவணை 3 லட்சத்து 42 ஆயிரத்து 456 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.

இரண்டாவது தடுப்பூசிக்கான காலக்கெடுவை எதிர்பார்த்து பலர் காத்திருந்த நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தியதாக மொபைலில் எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள், சுகாதாரத்துறையில் கேட்டதற்கு, அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக மழுப்பலாக பதில் கூறி அனுப்பி வருகின்றனர்.

இப்பிரச்னை கடந்த வாரம் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விஸ்வரூபம் எடுத்தது. தொடர்ந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம் என, மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது.

இதனால், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியுமா என, பலரும் குழப்பமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் இலக்கை அதிகப்படுத்தி காட்டுவதற்காக, இவ்வாறு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பொது மக்கள் கூறுகையில், நாங்கள் ஆதார் நகல் மற்றும் மொபைல் எண் கொடுத்து முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்.

இதற்கிடையே 2வது தவணை செலுத்துவதற்கான நாட்கள் நெருங்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே மொபைல் போனிற்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.

இதனால் நாங்கள் உண்மையாகவே 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கின்றனர்.

எனவே, எங்களுக்கு முறையாக 2வது தவணை தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர். இப்பிரச்னை தொடர்பாக சுகாதாரத்துரை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்டத்தில் பலருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ்., வந்ததாக புகார் எழுந்துள்ளது.

இது எதனால் ஏற்பட்ட தவறு என, விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., வந்திருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் எந்த தடையும் இருக்காது, என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories