December 8, 2025, 3:53 PM
28.2 C
Chennai

இனி திருமணங்களில் குறைந்த செலவில் ஹெலிகாப்டர் பவனி! அசத்திய குட்டு ஷர்மா!

nano - 2025

திருமண விழாக்களில் ஏதாவது புதுமையைப் புகுத்தி வைரலாவதுதான் இப்போதைய ட்ரெண்ட்.

அண்மையில் ஒரு திருமண விழாவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, மணமக்களை அழைத்து வந்த சம்பவம் பற்றி எல்லோருக்கும் தெரியும்.

அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் திருமண ஊர்வலங்களில் ஹெலிகாப்டர் பவனி மேற்கொள்ளமுடியாது.

அப்படி ஓர் ஆசையைப் பூர்த்தி செய்ய, செலவு குறைவான வழி ஒன்றையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் விலை மலிவாக ஹெலிகாப்டரில் மணமக்களைப் பறக்க வைக்கலாம். ஆனால், இது ஒரு ‘Man Made Car’ ஹெலிகாப்டர்.

மக்களின் கனவை நினைவாக்கும் விதமாக தனது நானோ காரை ஹெலிகாப்டர் வடிவில் மாற்றி திருமண ஊர்வலங்களுக்குப் பயன்படுத்திவருகிறார் பீகாரைச்சேர்ந்த இளைஞர் ஒருவர்.

இந்த ஹெலிகாப்டரைத் தயாரித்திருக்கிறார் பீகார் மாநிலம் பகாஹா நகரில் வசிக்கும் ஒரு மெக்கானிக். இவர் ஹெலிகாப்டர் ஆக்கியிருப்பது, ஒரு டாடா நானோ கார்!

ஏற்கெனவே இந்தியாவின் விலை குறைந்த காராக அறிமுகமான டாடா நானோ பல குடும்பங்களின் முதல் காராக ஆகிப்போனது. பின்னர், அதன் விற்பனை குறைவானதால், அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது இந்தியாவின் விலை மலிவான, ஹெலிகாப்டர் காராகவும் நானோ மாறியிருப்பது செம ட்ரெண்டிங்காக இருக்கிறது.

இதைத் தயாரித்திருப்பவர் குட்டு ஷர்மா என்ற மெக்கானிக். ஹெலிகாப்டர் என்றவுடன் ‘பட பட பட’ என்று 15,000 அடிக்கு மேல் பறக்கும் என்று கற்பனை செய்து விடாதீர்கள்.

இந்த ஹெலிகாப்டர் வடிவ நானோ, சாதாரண கார்போல தரையில்தான் செல்லும்; பறக்காது. திருமண விழாக்களில் பலர் தங்கள் புதிய மணமக்களை ஹெலிகாப்டரில் பிரமாண்டமான முறையில் அழைத்து வர விரும்புகின்றனர்.

ஆனால் அதற்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும், சாமானிய மக்களால் அதைச் செய்ய முடியாது என்பதால் இவ்வாறு ஹெலிகாப்டர் வடிவ காரை தான் உருவாக்கியதாகக் கூறுகிறார் குட்டு ஷர்மா.

இந்த நானோ காரை ஹெலிகாப்டர் வடிவில் வடிவமைக்க உலோகப் பேனல்களைப் பயன்படுத்தியுள்ளார் குட்டு ஷர்மா. இதற்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை செலவானதாக கூறுகிறார் ஷர்மா.

மேலும் இந்தக் காரை பலர் தங்கள் திருமணத்திற்காக முன்பதிவு செய்துள்ளதாகவும் ஒரு திருமண விழாவிற்கு 15,000 ரூபாய் வரை வாடகை வாங்குவதாகவும் கூறுகிறார்.

இது பற்றிக் கூறும் ஷர்மா, “டிஜிட்டல் இந்தியா காலத்தில், இந்தக் கண்டுபிடிப்பு தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு ஓர் உதாரணமாக இருக்கிறது. இதுபோன்ற ஹெலிகாப்டரைத் தயாரிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்.

இன்னும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டால் இதைப் பல மேம்பட்ட வசதிகளைக் கொண்ட ஹைடெக் ஹெலிகாப்டராக மாற்றிவிடலாம்” என்கிறார்.

இதே போல் 2019-ம் ஆண்டில் மிதிலேஷ் பிரசாத் என்பவர் ஹெலிகாப்டர்களை வடிவமைக்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்ற, தனது நானோவை ஹெலிகாப்டராக மாற்றினார் இதனை முழுவதும் முடிக்க 7 மாதங்கள் ஆகியுள்ளது.

பிரசாத் அதன் ரோட்டர்கள் மற்றும் பக்க பேனல்களில் வண்ணமயமான LED விளக்குகளையும் பொருத்தியுள்ளார் இதற்காக ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்தார். இந்தியாவைப் போலவே, சில ஜுகாடு மற்ற நாடுகளிலும் உள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், உண்மையில் பறக்கும் ஹெலிகாப்டரை உருவாக்க ஸ்கிராப் செய்யப்பட்ட கார்களின் பாகங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories