ராசிபுரம் விருதுநகரில் காதல் ஜோடிகள் பலி..!

ராசிபுரம் விருதுநகரில் அடுத்தடுத்து காதல்ஜோடிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சூர்யா ( 21). இவர் அத்திப்பலகானூர் அருகே ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

இவர், ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சூர்யா கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்றார். அங்கு பெருச்சாளிகள் புகுந்து கோழிகளை கொன்று விடுவதால் அதனை தடுப்பதற்காக நிலத்தில் மின்கம்பி வைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சுவது வழக்கம். அந்த மின்கம்பியில் சூர்யா எதிர்பாராமல் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவசர அவசரமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த அவரது உறவினர்கள், ராசிபுரம் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இதனிடையே காதலன் சூர்யா மின்சாரம் தாக்கி பலியானதை அறிந்த அவரது காதலி கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது அவருக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் நேற்று அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இருவரும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலன் மறைவை, அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. காதலனின் அன்பு, பாசம் என பழைய நினைவுகளை நினைத்து கதறி அழுதார்.

இதனால் மனமுடைந்த மாணவி மாலை 6 மணியளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார், அங்கு சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து அவரது தந்தை, எனது மகள் காதல் காரணமாக தற்கொலை செய்யவில்லை. அவர் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

   விருதுநகர் அருகே, சோலை மணி(20) என்ற பெண்ணும் பிரவீன் குமார் என்பவரும் காதலித்து வந்தனர். தனியார் மருத்துவமமையில் செவிலியராக பணியாற்றி வந்த சோலை மணி (20) என்ற பெண் திங்கட்கிழமைரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். காதலியின் இறப்பை தாங்கமுடியாமல், காதலன் பிரவின் குமார் (28), தானும் ஒரு தற்கொலை கடிதம் எழுதி அதை வாட்ஸ் அப் பக்கத்தில் பதிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.பலத்தகாயமடைந்த அவர் மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

images 2022 03 22T130406.148 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories