வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி..?

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை இன்று துவங்கியுள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு,கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், 12 -14 வயதுடைய சிறுவர்களுக்கு,’கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணியும் துவங்கியது.இந்நிலையில், இரண்டு தடுப்பூசி செலுத்தியோருக்கு, ஒன்பது மாத இடைவெளிக்குப் பின், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நடந்து வருகிறது.சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த டோஸ் செலுத்தப்படுகிறது. இதுவரை, 2.24 கோடி பூஸ்டர் டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்ப்புஇது குறித்து, மத்திய சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சர்வதேச விமான சேவைகள் இன்று துவங்க இருப்பதால், படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக, அதிக அளவில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லத் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு பூஸ்டர்  டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஒரு கோடி சிறார்களுக்கு தடுப்பூசிகடந்த 16ம் தேதி முதல், 12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த வயது சிறார்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ஒரு கோடிக்கும் அதிகமான, 12 – 14 வயதுடைய சிறார்களுக்கு, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது. இந்த சாதனையை தொடருவோம் என்றார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

.

images 51 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories