வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி..?

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை இன்று துவங்கியுள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு,கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், 12 -14 வயதுடைய சிறுவர்களுக்கு,’கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணியும் துவங்கியது.இந்நிலையில், இரண்டு தடுப்பூசி செலுத்தியோருக்கு, ஒன்பது மாத இடைவெளிக்குப் பின், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நடந்து வருகிறது.சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த டோஸ் செலுத்தப்படுகிறது. இதுவரை, 2.24 கோடி பூஸ்டர் டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்ப்புஇது குறித்து, மத்திய சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சர்வதேச விமான சேவைகள் இன்று துவங்க இருப்பதால், படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக, அதிக அளவில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லத் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு பூஸ்டர்  டோஸ் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஒரு கோடி சிறார்களுக்கு தடுப்பூசிகடந்த 16ம் தேதி முதல், 12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த வயது சிறார்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ஒரு கோடிக்கும் அதிகமான, 12 – 14 வயதுடைய சிறார்களுக்கு, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது. இந்த சாதனையை தொடருவோம் என்றார்.

.

images 51 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories