தமிழகத்தில் 10 மாதங்களாக, சட்டம் ,ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சமூக விரோதிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் கைகளில், தமிழகம் சிக்கி சீரழிந்து வருகிறது.
என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் 10 மாதங்களாக, சட்டம் , ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சமூக விரோதிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் கைகளில், தமிழகம் சிக்கி சீரழிந்து வருகிறது. பாலியல் குற்றம்தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், செயின் பறிப்பு சம்பவங்கள், பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.சட்டம் , ஒழுங்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், சமூக விரோதிகளை அடக்க வேண்டும்.
விருதுநகர் மற்றும் வேலுார் மாவட்டங்களில் நடந்த கூட்டு பலாத்காரத்தை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் கல்லுாரி மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை கிராமத்தில் உள்ள தி.மு.க., நிர்வாகி, 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துஉள்ளார்.மதுரை திருப்பரங்குன்றத்தில், பிளஸ் 1 படிக்கும் சிறுமியை, தி.மு.க., கிளைச் செயலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த அவலத்தின் ஈரம் காயும் முன், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சா வியாபாரிகள், போலீஸ் மீது வெடிகுண்டு வீசி தப்பி உள்ளனர். சென்னையில் துப்பாக்கியுடன் போதை மாத்திரை விற்பனையில், ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.சமூக விரோதிகளை கட்டுப்படுத்த இயலாதபடி, போலீஸ் துறையினரின் கைகளை கட்டியது யார் என, முதல்வர் விளக்க வேண்டும்.
இனியாவது சட்டம் , ஒழுங்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




