ஏப்16-ல் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல்.‌

பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. ஏப்14-ல் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.16-ந் தேதி அதிகாலை 5.50 மணிக்குமேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். 
சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக தல்லாகுளம் பிரசன்ன வெங் கடாசலபதி பெருமாள் கோவிலின் சன்னதி முன்பாக கொட்டகை முகூர்த்த விழா நடைபெற்றது.
இதில் கோவில் மண்டப வளாகத்தில் யாழி திருமுகத்திற்கு முன்பாக நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள், வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க நடந்தது. 

பின்னர் மங்கள இசையுடன், வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை, மாலைகளுடன் இணைக்கப்பட்டு கோவில் உள்பிரகாரம், மற்றும் வெளிப்புறம் உள்ள ராஜ கோபுரம் முன்பாகவும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மண்டபங்கள் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது. வருகிற ஏப்14-ல் கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படு கிறார். 

தொடர்ந்துஏப் 15-ந் தேதி கள்ளழகர் எதிர் சேவை மதுரை மூன்று மாவடியில் நடைபெறுகிறது. 16-ந் தேதி அதிகாலை 5.50 மணிக்குமேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத் திலும், அன்றிரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலிலும் சுவாமி எழுந்தருள்கிறார்.

17-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் காட்சி தருகிறார். அதன் பின்னர் கருட வாகனத்தில் எழுந் தருளி தேனூர் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், நடைபெறும். அன்றிரவு திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

18-ந் தேதி காலையில் மோகனவதாரத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். 19-ந் தேதி இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளல், 20-ந் தேதி காலையில் பிரியாவிடை பெற்று கள்ளழகர் பல்லக்கு பரிவாரங்களுடன் அப்பன் திருப்பதி வழியாக கள்ளழகர் கோவிலுக்கு செல்கிறார்.

 பின்னர் அன்று பகல் 1.30 மணிக்குள் அழகர் மலைக்கு கள்ளர் திருக்கோலத்தில் வந்து சேருதல். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கடந்த 2 வருடமாக கொரானா தொற்று காரணமாக சித்திரை திருவிழா, அழகர்கோவிலுக்கு உள்ளேயே அரசு வழிகாட்டுதல்படி நடந்தது. 2 வருடத்திற்கு பிறகு கள்ளழகர் இந்த வருடம் சித்திரை மாத திருவிழாவிற்கு மதுரைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

images 2022 04 02T172332.534 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories