உங்க மொபைல் தொலைஞ்சா.. உடனே இது செய்யுங்க.. காவல்துறை அட்வைஸ்!

mobile 2 - 2026

பொதுமக்கள் தங்களது மொபைல் போன்கள் தொலைந்துவிட்டால் அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் அந்த மாவட்ட சைபர் பிரிவு போலீசார் சமீப காலமாக நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடுபோன சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த மூன்று மாத காலத்தில் தங்களது செல்போன்களை தொலைத்துவிட்டதாக மற்றும் திருடு போனதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் கண்டுபிடிக்கப்பட்ட 60 செல்போன்களை உரிய சரிபார்ப்புகளுக்குப் பிறகு உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார்.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் “மொபைல் போன்களை திருடுபவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை மாற்றி விடுகிறார்கள். அப்படி மாற்றப்படும் மொபைல் போன்களை வேறு யாராவது பயன்படுத்த தொடங்கி விட்டால் அதை உடனடியாக மீட்க முடியும்.

இதற்கு செல்போனைத் தவறவிட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தங்களது செல்போனில் ஐஎம்இஐ எண் அல்லது காணாமல் போன மொபைல் போனில் உள்ள தொலை பேசி எண்ணை வைத்து புகார் அளிக்கலாம்.

நேரில் புகார் அளிக்க வேண்டும் என தேவையில்லை. இணையதளம் மூலமாகவும் காணாமல் போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்கலாம்” என்றார்.

பொதுமக்கள் தங்களது காணாமல்போன செல்போன்கள் குறித்து புகார் அளித்த உடனேயே சைபர் பிரிவு போலீசார் இதுகுறித்த விசாரணையைத் தொடங்கி விடுவார்கள் என குறிப்பிட்ட எஸ்பி “காணாமல் போன மொபைல் போன்கள் ஆன் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அது எப்படிப்பட்ட மொபைல் ஆக இருந்தாலும் எங்களால் கண்டுபிடிக்க முடியும்.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

ஆகவே பொதுமக்கள் செய்ய வேண்டியது செல்போன் காணாமல் போன உடனே அதன் ஐஎம்இஐ எண்ணை வைத்து விரைவாக புகார் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories