உங்க மொபைல் தொலைஞ்சா.. உடனே இது செய்யுங்க.. காவல்துறை அட்வைஸ்!

mobile 2 - 2026

பொதுமக்கள் தங்களது மொபைல் போன்கள் தொலைந்துவிட்டால் அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் அந்த மாவட்ட சைபர் பிரிவு போலீசார் சமீப காலமாக நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடுபோன சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த மூன்று மாத காலத்தில் தங்களது செல்போன்களை தொலைத்துவிட்டதாக மற்றும் திருடு போனதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் கண்டுபிடிக்கப்பட்ட 60 செல்போன்களை உரிய சரிபார்ப்புகளுக்குப் பிறகு உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் “மொபைல் போன்களை திருடுபவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை மாற்றி விடுகிறார்கள். அப்படி மாற்றப்படும் மொபைல் போன்களை வேறு யாராவது பயன்படுத்த தொடங்கி விட்டால் அதை உடனடியாக மீட்க முடியும்.

இதற்கு செல்போனைத் தவறவிட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தங்களது செல்போனில் ஐஎம்இஐ எண் அல்லது காணாமல் போன மொபைல் போனில் உள்ள தொலை பேசி எண்ணை வைத்து புகார் அளிக்கலாம்.

நேரில் புகார் அளிக்க வேண்டும் என தேவையில்லை. இணையதளம் மூலமாகவும் காணாமல் போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்கலாம்” என்றார்.

பொதுமக்கள் தங்களது காணாமல்போன செல்போன்கள் குறித்து புகார் அளித்த உடனேயே சைபர் பிரிவு போலீசார் இதுகுறித்த விசாரணையைத் தொடங்கி விடுவார்கள் என குறிப்பிட்ட எஸ்பி “காணாமல் போன மொபைல் போன்கள் ஆன் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அது எப்படிப்பட்ட மொபைல் ஆக இருந்தாலும் எங்களால் கண்டுபிடிக்க முடியும்.

ஆகவே பொதுமக்கள் செய்ய வேண்டியது செல்போன் காணாமல் போன உடனே அதன் ஐஎம்இஐ எண்ணை வைத்து விரைவாக புகார் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories