கொடைக்கானல் பகுதியில் கனமழை..

Published:

கொடைக்கானல் பகுதியில்
பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.

கொடைக்கானல் பகுதியில் தற்போது கோடை காலம் கோடை வெயிலோடு குளுகுளு சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்றும் ஏராளமான வாகனங்களில் பயணிகள் குவிந்தனர். இதில் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவியர் வருகை அதிகளவில் இருந்தது. 

இதனிடையே இன்று காலை முதல் மேகமூட்டம் நிலவிய நிலையில் பகல் 12 மணி முதல் மாலை நகரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

அத்துடன் பல்வேறு நீர்வீழ்ச்சிகளிலும் அதிக அளவு வெள்ளம் கொட்டியது.
திடீரென மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் கல்லூரி மாணவ-மாணவியர் ஏரிச்சாலையில் ஒதுங்குவதற்கு இடமின்றி மழையில் நனைந்தவாறே தங்களது வாகனங்களுக்கும், அறைகளுக்கும் திரும்பினர். 

மழையினை தொடர்ந்து மாலை குளிர் நிலவியது. கனமழை காரணமாக நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி வழியும் சூழ்நிலையில் உள்ளது. அத்துடன் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கனமழை காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்டு வந்த தீ விபத்துகளுக்கு தீர்வு ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

images 22 1 - 2026

Related articles

Recent articles

spot_img