பார்வையிலே பதற வைத்த பாங்கு..!

lion 1 - 2026

காட்டின் ராஜாவான ஒரு சிங்கத்தின் அருகில் செல்ல, வளர்ந்த ஹைனாக்களே (கழுதைப்புலி) அச்சம் கொள்ளும் நிலைப்பாட்டில், “இளங்கன்று பயம் அறியாது” என்கிற பழமொழியை நிரூபிக்கும் வண்ணம் 2 குட்டி ஹைனாக்கள் ஒரு சிங்கத்தை நேருக்கு நேர் சந்திக்கும் வீடியோ, இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் அள்ளிக்கொண்டு இருக்கிறது.

குறிப்பிட்ட வீடியோவில், ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய இரையை “கூலாக அமர்ந்து” சாப்பிட்டு கொண்டிருக்கிறது. சிங்கத்தின் உண்மையான வலிமையை முன்பின் அறியாத இரண்டு குட்டி ஹைனாக்கள், அதன் அருகில் சென்று இரையில் பங்குகேட்க முயற்சிக்கின்றன.

உணவின் மீது மட்டுமே இருந்த சிங்கத்தின் கவனம் சட்டென்று குட்டி ஹைனாக்கள் மீது திரும்பியது. சிங்கம் தன் தலையை திருப்பிய வேகத்தில் இரண்டு ஹைனா குட்டிகளில், பின்னால் இருந்த ஒரு குட்டி ஓட்டம் எடுத்தது.

ஆனால் முன்னால் இருந்த குட்டி ஹைனா பெரிதும் அச்சம் கொள்ளாமல், ஒவ்வொரு அடியாய் பின்னோக்கி எடுத்து வைத்து, சிங்கத்தின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தது.

அந்த சிங்கம், முன் நிற்கும் குட்டி ஹைனாவை மிகவும் எளிதில் தாக்கியிருக்கலாம்; சிங்கம் ஒரு தட்டு தட்டினால் அந்த குட்டி ஹைனா தடம் தெரியாமல் போய் விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சிங்கம் எந்த தாக்குதலையும் நிகழ்த்தவில்லை,

ஆனால் எதிர்நின்ற குட்டி ஹைனாவை ஓரிரு நொடிகள் முறைத்து பார்த்தது. அந்த பார்வை சிங்கத்தின் கடைசி எச்சரிக்கை என்பதை புரிந்துகொண்ட குட்டி ஹைனா இடத்தை காலி செய்தது.

வைல்ட் லைஃப் அனிமல் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு மிக மிக பொருத்தமான கேப்ஷன் எழுதப்பட்டுள்ளது – “பார்வையால் கொல்ல முடியும் என்றால்”.

இதுவரை 209,009 க்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவில் விலங்குகளின் ராஜ்ஜியம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories