4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலக்கல் கண்டுபிடிப்பு!

Stone - 2026

மானாமதுரை சின்னக்கண்ணனூர் கிராமத்தில் பில்லனேரி கண்மாய் பகுதியில் சேங்கை முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் 4 அடி உயரமுள்ள கல் உள்ளது.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்படி பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தக்கல், பிற்கால பாண்டியர் காலத்தில் நிறுவப்பட்ட அரச முத்திரையுடன் கூடிய சூலக்கல் என்பதை கண்டறிந்தனர்.

மேலும் இதுபற்றி அவர்கள் கூறியதாவது, பொதுவாக சூலக்கல் பயன்பாடானது அரசர்கள் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு மேற்கொள்வதற்காக நிலங்களை வரி நீக்கி நிவந்தம் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சிவன், காளி, அய்யனார் கோவிலுக்கு வழங்கும் தானம் நிலதானம். பெருமாள் கோவிலுக்கு வழங்கும் தானம் திருவிடையாட்டம். சமண பௌத்த பள்ளிகளுக்கு வழங்கும் தானம் பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படும்.

மேலும் தானமாக வழங்கும் நான்கு திசைகளிலும் எல்லைக் கற்கள் நடப்பட்டு கோவில் நிலங்களாக பாதுகாக்கப்படும். சிவன் கோவில்களுக்கு வழங்கும் நிலங்களில் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்டு சூலக்கற்கள் நடப்படும்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

சின்னக்கண்ணனூரில் கண்டறியப்பட்ட சூலக்கல் 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டது. இந்த சூலக்கல்லில் ஒரு சூலம் புடைப்புச் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.

பாண்டியர்கால அரச முத்திரை இந்த திரிசூல புடைப்புச் சிற்பத்தின் வலதுபுரம் ஒரு மீனும், இடதுபுரம் ஒரு செண்டு கோலும், புடைப்புச் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.

கி.பி 1190 முதல் கி.பி 1310 வரையிலான பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இந்த சூலக்கல் நிறுவப்பட்டு இருக்கலாம்.

இதன் மூலம் இந்தப்பகுதி பிற்கால பாண்டியர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்று அனுமானிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்டு இந்த பாண்டிய மன்னனின் காலம் என்று கூறுவதற்கு கல்வெட்டு ஏதும் பொறிக்கப்படவில்லை.

முறையான தொல்லியல் அகழாய்வுக்கு உட்படுத்தினால் பாண்டியர்களின் வரலாற்றை பறைசாற்றும் தொல்லியல் எச்சங்கள் வெளிப்படலாம் என்று அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories