முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இருவர் பாஜக வில் இருந்து நீக்கம்..

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக பா.ஜ.க நிர்வாகிகளான நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிந்தால் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பா.ஜ.க மேலிடம் அதிரடியாக நீக்கியநிலையில் பாஜக வின் அதிரடி நடவடிக்கைக்கு  சவுதி, பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பேசினார். இத தொடர்பாக மஹாராஷ்டிரா போலீஸ் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே பா.ஜ.க வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிந்தால் சமூக வலைதளத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிந்தாலின் கருத்துகளுக்கு பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

கத்தார், குவைத் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய கத்தார் அரசு, ‛இந்தியாவில் ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர், இஸ்லாமிய மதம் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக’ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக, நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பா.ஜ.க அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது எனவும் பா.ஜ.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க மேற்கொண்ட இந்த அதிரடி  நடவடிக்கைக்கு  சவுதி, பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் உட்பட பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

nupur - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories