விண்ணில் பாய்ந்தது மாணவிகளின் செயற்கைக்கோள்! விண்வெளித் துறையின் புதிய சாதனை

sslv students.jpeg - 2026
sslv asathisat - 2026

தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் பாய்ந்தது.திட்டமிட்டபடி சென்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட், செயற்கைக்கோள்களை புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

மேலும், குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் முதல்முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது விண்வெளித் துறையில் புதிய மைல்கல் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அரசுப் பள்ளி மாணவிகளின் கூட்டுழைப்பு, இஸ்ரோவின் குறைந்த எடையுடைய ராக்கெட் என எஸ்எஸ்எல்வி ராக்கெட் பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளதால், இந்த வெற்றி புதிய சாதனையாகவும் கருதப்படுகிறது. 

வழக்கமாக அதிக எடையுள்ள செய்ற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். அதிலேயே குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போது குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களுக்கு பிரத்யேகமாக குறைந்த எடையுடைய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். ஆனால், எஸ்எஸ்எல்வி மூலம் 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த இயலும்.

அந்தவகையயில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில், 144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோளும், 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில், ஆசாதிசாட் எனும் செயற்கைக்கோள், நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது.ஆசாதிசாட்
இந்த இரு செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு  எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.18 மணிக்கு கவுன்டவுன் தொடங்கப்பட்டது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories