December 6, 2025, 7:07 AM
23.8 C
Chennai

சபரிமலை -மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிச 30ஆம் தேதி மாலை நடை திறப்பு..

1813542 sabarimala - 2025

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்றுடன் நிறைவு பெற்று இரவு நடை அடைக்கப்பட்டு இனி மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிச 30ஆம் தேதி மாலை நடை திறக்கும்.. மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. சபரிமலையில் 41 நாட்களில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை வந்தனர். நேற்று மண்டல பூஜை விழா நடந்தது.

இதையொட்டி ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்பனை காண கடந்த 41 நாட்களும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நடை திறந்த முதல் நாளிலேயே கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தனர். அதன்பின்பு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது.

அதன்படி கடந்த 41 நாட்களில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 30 லட்சத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல கோவிலுக்கு வந்த பக்தர்கள் வாங்கிய அப்பம், அரவணை மற்றும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.222 கோடியே 98 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. அடுத்து மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் நேற்று மாலை கலச ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் 30-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் ஜனவரி 20-ந் தேதி வரை நடை திறந்து இருக்கும். இதுபற்றி கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறும்போது, மண்டல பூஜையின்போது பக்தர்கள் கோவிலில் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாற்று திறனாளிகள், குழந்தைகள் தரிசனம் செய்ய சிறப்பு வரிசையும் உருவாக்கப்பட்டிருந்தது. இதுபோல மகர விளக்கு பூஜையின் போதும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories