உ.பி, தேநீர்க்கடையின் மீது சரக்கு லாரி ஒன்று மோதியதில் 6 பேர் பலி..

images 42 1 - 2026

உத்தரப் பிரதேசத்தின், ரேபரேலியில் குர்பக்ஸ்கஞ்ச் பகுதியில் உள்ள தேநீர்க்கடையின் மீது இன்று சரக்கு லாரி ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். 

பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனி மற்றும் மோசமான கட்சித் திறன் காரணமாக சரக்கு லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேநீர்க் கடையின் மீது மோதியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த 10 பேரில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் லல்லாய், லல்லு, ரவீந்திரன், விருந்தாவன் மற்றும் சிவ மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அசோக் பாஜ்பாய், ராம் பிரகாஷ் திவாரி, திபேந்திர லோதி மற்றும் ஷ்ரவன் லோதி ஆகிய நால்வரும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் அடர் பனிமூட்டம் 7பேர்பலி…

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர். டெல்லியில் தொடர்ந்து 5ம் நாளாக நேற்றும் கடும் குளிர் அலை வீசியதால் மக்கள் உறைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நேற்றும் குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்தது.டெல்லியில் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும், இமாச்சல், உத்தரகாண்ட் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களைவிட குறைவான வெப்பநிலை பதிவானது. அடர் பனிமூட்டம் காரணமாக பார்வை திறன் 25 மீட்டருக்கு குறைவாக குறைந்தது. இதன் காரணமாக, ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. கடும் குளிர் அலை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்திலும் நேற்று கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உன்னாவில் விரைவுச்சாலையில், பனி மூட்டத்தால் நேபாளம் நோக்கி சென்ற பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதின.இதில் பஸ் டிரைவரும், நேபாளத்தை சேர்ந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதே போல, ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் பிப்ராலி கிராமத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 பேர் பலியாகினர். பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்த விபத்துக்கள் காரணமாக, வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஜார்கண்டில் கடும் குளிர் நிலவி வருவதால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிகளுக்கு ஜனவரி 8ம் தேதி வரை விடுமுறை  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குளிர் இன்னும் குறையாததால் வரும் 14ம் தேதி வரை தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.* 260 ரயில்கள் ரத்துஉபி, டெல்லி, பீகார், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானில் பனி மூட்டம் நிலவுவதால் நேற்று மட்டும் 260 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் 82 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 140 பயணிகள் ரயில்களும் அடங்கும். 40 புறநகர் ரயில்களும் ரத்தாகி உள்ளன. 335 ரயில்கள் தாமதமாக வந்துள்ளன.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories