சென்னை: கவிஞர் தாமரையை விவாகரத்து செய்வது தன் சரியாக இருக்கும் என்று கூறினார் அவரது கணவர் தியாகு. முன்னதாக, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது கணவர் தியாகு திருடனைப் போல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். சூளைமேடு முல்லை தெருவில் உள்ள தியாகு வீட்டு முன்பு நேற்று மகனுடன் தர்ணா போராட்டமும் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை ஒரு மனித உரிமைப் போராளியாகவும், தமிழ் தேசியவாதியாகவும் அடையாளப் படுத்திக் கொண்ட என் கணவர் தியாகு மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் கவிஞர் தாமரை அறிவித்திருந்தார். இன்றும் அவரது போராட்டம் தொடரும் நிலையில், தாமரையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவரது கணவர் தியாகு, நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. வேளச்சேரியில் உள்ள மகள் வீட்டில் தங்கியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறேன். கடந்த நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து தாமரையுடன் நான் வாழவில்லை என்பது உண்மைதான். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எங்கள் வாழ்க்கையில் பிரச்னை இருந்து வந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இருவரும் பிரிந்து விடுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதினேன். இதை கடிதம் மூலம் அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. சட்ட ரீதியாகப் பிரிந்து விடலாம் என பல முறை வற்புறுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை. தாமரை நல்ல கவிஞர். நல்ல சிந்தனைவாதி. ஆனால் எனது குடும்ப வாழ்க்கை என்பது பொது வாழ்க்கைக்குள் உட்பட்டது. தாமரை அப்படிப் பார்ப்பது இல்லை. அது தான் பிரச்னை. தாமரை வெளியிட்டுள்ள அறிக்கைகள் சேர்ந்து வாழ்வதற்கான வழி இல்லை. மகனைப் பிரிவது தான் கஷ்டமாக இருக்கிறது. தாமரையும், நானும் இனி சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து செய்து கொள்வது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். என்று கூறியுள்ளார். [su_youtube url=”https://youtu.be/Qr80ylMlgHM”] video courtesy: fastmessenger.net
கவிஞர் தாமரையை விவாகரத்து செய்வதே சரியாக இருக்கும்: கணவர் தியாகு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari