மாநகராட்சி தயவில், மதுரை தெருக்களில் புதிய ஆறுகள்!

madurai new rivers in streets - 2026
#image_title

மதுரை: மதுரை நகரில் பல்வேறு இடங்களில் தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதால், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல், மழை நீருடன் சேர்ந்து ஆறு போல தோற்றமளிக்கிறது. மதுரை என்றாலே ஞாபகத்துக்கு வருவது ,வைகை ஆறு மற்றும் மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ தான். ஆனால், தற்பொழுது மதுரை நகரில் புதிய ஆறு தெருக்களில் உருவெடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில், மதுரை நகரில் குழாயில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


அவ்வாறு குழாயில் பதிக்கும் போது, ஒப்பந்ததாரர்கள் தண்ணீர் குடிநீர் குழாயில் உடைத்தும், கழிவு நீர் குழாய்களை சேதப்படுத்தியும் விடுவதால், மழைக்
காலங்களில் ஆங்காங்கே தெருக்களில் கழிவுநீரும் மழை நீரும் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது .
இதனால் சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுவது உடன், பள்ளங்களின் தவறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து , மதுரை மாநகராட்சி மேயர் ,ஆணையாளர், வார்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள்
கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு சென்றும், சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூட நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை மேலமடை 36-வது வார்டு மருதுபாண்டி தெருவில், பலத்த மழையால் கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதை பார்த்த பொதுமக்கள் மதுரையில் புதிய ஆறு உருவெடுத்துகிறது என கூறியதை கேட்க முடிந்தது.
மதுரை மாநகரில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களை, மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீர் செய்தும், உடைந்த கழிவுநீர் குடிநீர் குழாய்களை சரிப்படுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் முத்துராமன் கூறியது:
“மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், கோமதிபுரம், ஜூபிலி டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் தோன்றிய பள்ளங்கள் சரிவர மூடப்படாததால், மலைக்
காலங்களில் கழிவு நீரும் மழை நீரும் தெருக்களி குளம் போல தேங்கியுள்ளது. மதுரை தாசிலா நகர் மருதுபாண்டியர் தெரு ,காதர் மைதீன் தெரு, அன்பு மலர் தெரு, வீரவாஞ்சி தெரு, அல்லிலி வீதி, திருக்குறள் வீதி ஆகிய பகுதிகளில் சாலையில் ஆறு போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதை தடுக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories