கச்சபேஸ்வரர் கோயில் மரத்தை வெட்டிய அறிவற்ற அறநிலைய துறை: இந்து முன்னணி கண்டனம்!

kanchipuram kachapeswarar temple - 2026
#image_title

அறமும், அறிவும் இல்லாத அக்கிரமத்துறையாக மாறும் அறநிலையத்துறை, காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் ஸ்தல விருட்சத்தை வெட்டிய அநியாயத்தை கண்டிக்கிறோம் என்று இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் 1600 ஆண்டு தொன்மையானது இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது.

இன்னிலையில் கோயிலில் உள்ள அரிய வகை மரங்களான சிவபூஜைக்குரிய நாகலிங்க மரம், சரக்கொன்றை மரம், வன்னி மரம் , மாமரம்,200 ஆண்டு தொன்மையான அரச மரத்துடன் இணைந்த வேப்பமரம், வில்வ மரம், ஸ்தல விருட்ச முருங்கை மரத்தையும் வெட்டியுள்ளார்கள்.

கும்பபிஷேகத்திற்கு யாக குண்டத்தில் போட வெட்டப்பட்டுள்ளதாக இக்கோயில் அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலர் திரு.நடராஜன் கூறியதாகத் தெரிகிறது.

காஞ்சி புராணத்தில் “அக்காஞ்சியில் நீங்காது அமர்ந்திடும் கொன்றைவார் சடையனைக் கச்சபேசன் தனைக் கும்பிடச் சென்றவர் கண்டவர் கருதினர் யாவரும் தீது தீர்ந்து ஒன்றி ஒன்றா நிலை மாறிலா முத்தி பெற்றுய்வரே” என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு பாடல் பெற்ற ஸ்தலத்தின் மரங்களை வெட்டி உள்ளது இந்து சமய அறநிலைத்துறையின் உச்ச பட்ச கொடிய செயல். பக்தர்களுக்கும் , வழிபாட்டிற்கும் எவ்வித இடையூறும் இல்லாத மரங்கள் வெட்டப்பட்டுள்ளது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது.

பல லட்சம் செலவில் பிரம்மாண்ட யாகசாலை கட்டியவர்களுக்கு யாக குண்டத்தில் போட விறகு வாங்குவதற்கு பணம் இல்லையா? யாரிடம் அனுமதி பெற்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை ஆலயங்களைக் காக்கவா? அல்லது அழிக்கவா? என்று பக்தர்கள் கேட்கிறார்கள்.

இத்தகைய அலட்சிய, அராஜகப் போக்கினை இந்துமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். இதுபோல் தொடரந்து கோவில்களில் நடைபெறும் அக்கிரமங்களை அடக்கத் தெரியாத அமைச்சர் சேகர் பாபு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்துமுன்னணி துவங்கப்பட்ட காலத்திலிருந்தே அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆகவே பக்தர்கள் தன்னெழுச்சியாக குரல் கொடுத்து இந்த அக்கிரமத்துறையை அகற்ற போராட முன்வர வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories