IPL 2024: தொடரும் மும்பை அணியின் சொதப்பல்கள்!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 01.04.2024 – மும்பை
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

          மும்பை அணியை (125/9, திலக் வர்மா 32, ஹார்திக் பாண்ட்யா 34, போல்ட் 3/22, சாஹல் 3/11) ராஜஸ்தான் அணி (127/4, ரியன் பராக் 54, ஆகாஷ் மத்வால் 3/20) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை அணியின் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. ரோஹித் ஷர்மா மற்றும் நமன் தீர் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மூன்றாவது ஓவரில் டிவால்ட் ப்ரீவிஸ் பூஜ்யத்தில் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மும்பை அணி மீண்டு வரவேயில்லை. திலக் வர்மா (32 ரன்) மற்றும் ஹார்திக பாண்ட்யா (34 ரன்) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 125 ரன் எடுப்பதற்கே மும்பை அணி தடுமாறியது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

          ராஜஸ்தான் அணியில் போல்ட் அற்புதமாக பந்துவீசினார். அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் அவரது புள்ளி விவரம் 2 ஓவர்-மெய்டன் இல்லை-4 ரன்- 3 விக்கட். பின் ஓவர்களில் யஜுவேந்திர சாஹால் சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர் வீசி 11 ரன் கொடுத்து மூன்று விக்கட் வீழ்த்தினார்.  

          126 என்ற எளிய இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் முதல் மூன்று வீரர்கள் யஸஸ்வி ஜெய்ஸ்வால் (10 ரன்), ஜாஸ் பட்லர் (13 ரன்), சஞ்சு சாம்சன் (12 ரன்) சரியாக விளையாடவில்லை. அதன் பிறகு ஆடவந்த ரியன் பராக் (54 ரன்), மற்றும் அஷ்வின் (16 ரன் இருவரும் நன்றாக ஆடி அணிக்கு 15.3 ஓவரில் வெற்றியைத் தேடித்தந்தனர்.

          ராஜஸ்தான் அணியின் ட்ரண்ட் போல்ட் சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடவிருக்கின்றன.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories