January 18, 2025, 5:39 AM
24.9 C
Chennai

செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள்!


செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

செங்கோட்டை இரயில் நிலைய வளாகத்தில் வைத்து பொதிகை
எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு 21வது பிறந்தநாள் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த இரயிலானது செங்கோட்டையிலிருந்து பொதிகை எஸ்பிரஸ் இரயில் தென்காசி, கடையநல்லுார் சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக சென்னை வரை
நாள்தோறும் இயக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இந்த இரயில் வந்து செல்கிறது. இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் நேற்று செப்-20ஆம் தேதியில் 20வது ஆண்டு நிறைவு பெற்று 21வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் இரயில் நிலைய வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இரயில் ஓட்டுநர்கள் அனில்குமார், அஸ்லாம்ஹனீப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

ALSO READ:  மக்களுக்கான டிஜிட்டல் பயன்பாட்டை முழுமை பெறச் செய்வோம்: மனதின் குரலில் மோடி!

பின்னா் கேக் வெட்டி ஓட்டுநர்கள், மற்றும் இரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்க பொருளாளா் கேகே.சுந்தரம், உறுப்பினா்கள் சங்கரபாண்டியன், நவநீதகிருஷ்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை