December 5, 2025, 1:16 AM
24.5 C
Chennai

பெண்களின் குங்குமத்தைப் பறித்தால், என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பிரதர் மோடியின் ஆவேச உரை!

pm modi speech about operation sindoor - 2025

PM ADDRESS TO THE NATION ON 12.05.2025

தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நாம் அனைவரும், கடந்த நாட்களிலே, எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நாம் அனைவரும், கடந்த நாட்களிலே, தேசத்தின் வல்லமை, மற்றும், அதன் ஒழுங்குமுறை, இரண்டையும் பார்த்தோம்.  நான் அனைத்திற்கும் முதன்மையாக, பாரதத்தின் பராக்கிரமம் வாய்ந்த இராணுவத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும், நம்முடைய உளவுப்படைப் பிரிவினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து பாரதவாசிகள் தரப்பிலிருந்து, சல்யூட் செய்கிறேன். 

நம்முடைய வீரம் நிறைந்த இராணுவத்தினர், ஆப்பரேஷன் சிந்தூரின் இலக்குகளை சாதிப்பதற்காக, எல்லையற்ற வீரத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். 

நான் அவர்க்ளின் வீரத்தை, அவர்களின் மனோதைரியத்தை, அவர்களின் உறுதிப்பாட்டை, இன்று, அர்ப்பணம் செய்கிறேன், நம் தேசத்தின் அனைத்து அன்னையர்களுக்கும், தேசத்தின் அனைத்து சகோதரிகளுக்கும், மேலும், தேசத்தின் ஒவ்வொரு மகளுக்கும், இந்தப் பராக்கிரமத்தை சமர்ப்பணம் செய்கிறேன். 

நண்பர்களே, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று, பஹல்காமிலே, பயங்கரவாதிகள் வெளிப்படுத்திய காட்டுமிராண்டித்தனம் வாயிலாக, அவர்கள், தேசத்தையும் உலகையும் உலுக்கிப் போட்டார்கள்.  

விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த, ஒன்றுமறியாத அப்பாவிக் குடிமக்களை, அவர்களின் மதம் என்னவென்று கேட்டு, அவர்களின் குடும்பத்தாருக்கு முன்பாகவே, அவர்களின் குழந்தைகளின் முன்பாக, ஈவிரக்கமில்லாமல் கொன்று போடுவது, இது பயங்கரவாதத்தின், மிகவும், பயங்கரமான கோரமுகம். 

கொடூரமான பக்கம்.  இது தேசத்தின் நல்லிணக்கத்தைத் தகர்க்கும், பயங்கரமான முயற்சியும் கூட.  என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையிலே, இந்த வலி மிகவும் பெரியதாக இருந்தது.  இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாடு அனைத்தும், அனைத்துக் குடிமக்களும், சமூகம் அனைத்தும், அனைத்துப் பிரிவும், அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே குரலெடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க, ஒன்றுபட்டார்கள். 

நாம் பயங்கரவாதிகள் அனைவரையும், மண்ணோடு மண்ணாக்கி அழிக்க, நமது இராணுவத்தினருக்கு அனைத்து சுதந்திரத்தையும் அளித்து விட்டோம்.  அந்த வகையில் இன்று, அனைத்துத் பயங்கரவாதிகளும், அனைத்துத் பயங்கரவாத அமைப்புகளும், தெரிந்து கொண்டு விட்டார்கள், நம்முடைய சகோதரிகள் மகள்களுடைய, வகிடுகளிலிருந்து, சிந்தூரத்தை அகற்றுவதன், பலன் என்னவாக இருக்கும் என்று. 

நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூர், இது வெறும் பெயர் அல்ல.  இது தேசத்தின் கோடானுகோடி மக்களுடைய, உணர்வுகளின் பிரதிபிம்பமாகும்.  ஆப்பரேஷன் சிந்தூர், நியாயத்துக்கான அகண்ட சபதமேற்பாகும்.  

மே மாதம் 6ஆம் தேதி இரவு வேளையிலே, மே 7ஆம் தேதி காலையிலே, ஒட்டுமொத்த உலகத்தாரும், நாம் சூளுரைத்ததன், விளைவுகள் என்னவென்று கண்டார்கள்.   பாரதநாட்டின் சேனைகள், பாகிஸ்தானத்திலே, பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களிலே, பயங்கரவாதிகள் பயிற்சி மையங்களிலே, துல்லியமாகத் தாக்கினார்கள். 

பயங்கரவாதிகள், கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள், நம் பாரதம், இத்தனை பெரிய முடிவை எடுப்பார்கள் என்று.  ஆனால், தேசம் எப்போது ஒன்றுபட்டு விட்டதோ, தேசத்திற்கே முதன்மை என்ற உணர்வால் நிரம்பி இருக்கிறதோ, அனைத்திற்கும் மேலாக தேசமாகிறது, அப்போது, தீவிரமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.  அதன் விளைவுகளை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

பாகிஸ்தானின் பயங்கரவாத மறைவிடங்களின் மீது, பாரதத்தின் ஏவுகணைகள் தாக்குதல் தொடுத்த போது, பாரதத்தின் ட்ரோன்கள் தாக்கிய போது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் நெஞ்சுரமும் நிலைகுலைந்து போனது.  பஹாவல்புர், மற்றும் முரீத்கே போன்ற, பயங்கரவாத முகாம்கள், ஒரு வகையிலே, உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 

உலகின் எந்த மூலையிலும் கூட, பெரிய பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதும், அது ஒன்பது பதினொன்றாக இருக்கட்டும், அல்லது லண்டன் ட்யூப் குண்டுவெடிப்புகளாகட்டும், அல்லது பாரதத்திலே, பல பத்தாண்டுகளாக நடந்த, பெரியபெரிய பயங்கரவாத தாக்குதல்களாகட்டும், இவையனைத்தின் தொடர்பும், ஏதோ ஒரு வகையிலே, பயங்கரவாதத்தின் இந்த முகாம்களோடு தான் இணைந்து வந்திருக்கிறது. 

பயங்கரவாதிகள், நம்முடைய சகோதரிகளின் சிந்தூரத்தை அழித்தார்கள், ஆகையால், பாரதம், பயங்கரவாதிகளின் இந்த தலைமையகத்தை வேரறுத்து விட்டோம்.  பாரதத்தின் இந்த தாக்குதல்களிலே, 100க்கும் மேற்பட்ட, கொடூரமான பயங்கரவாதிகள், கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  பயங்கரவாதத்தின் பல தலைவர்கள், கடந்த 25-30 ஆண்டுகளாக, சுதந்திரமாக, பாகிஸ்தானிலே திரிந்து கொண்டிருந்தார்கள், இவர்கள் பாரதத்திற்கு எதிராக சதிகள் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களை பாரதம், சொடுக்குப் போட்டு முடித்து விட்டது.

நண்பர்களே, பாரதத்தின் இந்தச் செயல்பாட்டால், பாகிஸ்தானம், கடுமையான ஏமாற்றத்தால் சூழப்பட்டு விட்டது, அதிர்ச்சியில் ஆழந்தது, செய்வதறியாமல் திகைத்தது, மேலும், இந்த திகைப்பு காரணமாக, அவர்கள் மேலும் ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டார்கள்.

  பயங்கரவாதிகளுக்கு எதிரான, பாரதத்தின் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு தருவதற்கு பதிலாக, பாகிஸ்தானம், பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது, பாகிஸ்தானம், நமது பள்ளிகள் கல்லூரிகளின் மீதும், குருத்வாராக்களின் மீது, கோயில்கள் மீது, சாதாரண குடிமக்களின் வீடுகளைக். குறிவைத்துத் தாக்கினார்கள், பாகிஸ்தானம், நமது இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் தொடுத்தது, ஆனால் இதிலும் கூட, பாகிஸ்தானத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டது. 

உலகமே பார்த்தது, அதாவது எப்படி, பாகிஸ்தானத்தின் ட்ரோன்களும், பாகிஸ்தானத்தின் ஏவுகணைகளும், பாரதத்தின் முன்பாக துரும்புகளைப் போல நொறுங்கின என்பதை.  பாரதத்தின் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு முறைகள், அவற்றை வானிலேயே தவிடுபொடியாக்கி விட்டன. 

பாகிஸ்தானம் அடுத்ததாக, எல்லையின் மீது போர் தொடுத்தது, ஆனால் பாரதம், பாகிஸ்தானத்தின் மையப்பகுதியிலேயே தாக்குதல் தொடுத்தது.  பாரத நாட்டின் ட்ரோன்கள், பாரத நாட்டின் ஏவுகணைகள், மிகத் துல்லியத்தோடு இலக்குகளைச் சென்று தாக்கின.  பாகிஸ்தானியர்களின் விமானப்படையின், விமானத் தளங்களுக்கு, நாசத்தை ஏற்படுத்தின, இவை குறித்து பாகிஸ்தானம் பீற்றிக் கொள்வது வழக்கம்.  பாரதம் முதல் மூன்று தினங்களிலேயே , பாகிஸ்தானத்தை எந்த அளவுக்கு அழித்து விட்டது என்றால், இதைப் புரிந்து கொள்ளக்கூட அவர்களால் முடியவில்லை.

ஆகையாலே, பாரதத்தின் ஆக்ரோஷமான செயல்பாட்டிற்குப் பிறகு, பாகிஸ்தானம், தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேட ஆரம்பித்தது.  பாகிஸ்தானம் உலகம் எங்கிலும், அழுத்தத்தைக் குறைக்க வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தது.  மிக மோசமான வகையில் அடிவாங்கிய பிறகு, இந்தக் கட்டாயம் காரணமாகவே, மே 10ஆம் தேதி பிற்பகலிலே, பாகிஸ்தானிய சேனையானது, நமது டிஜி எம் ஓவை தொடர்பு கொண்டார்கள். 

அதற்குள்ளாக நாம், பயங்கரவாதிகளின் கட்டமைப்புக்களை, பெரிய அளவில் அழித்தொழித்து விட்டிருந்தோம்.  நாம் பயங்கரவாதிகளுக்கு மரணத்தைப் பரிசாக அளித்திருந்தோம்.  பாகிஸ்தானுடைய நாட்டுக்குள்ளே குடியமர்த்தப்பட்ட, பயங்கரவாத முகாம்களை நாம், இடிபாடுகளாக ஆக்கியிருந்தோம். 

ஆகையால், பாகிஸ்தானத்தின் தரப்பிலிருந்து, வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, பாகிஸ்தான் தரப்பிலிருந்து, கூறப்பட்ட போது, எங்கள் தரப்பிலிருந்து, இனி வருங்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத செயல்பாடுகளோ, வேறு எந்த, இராணுவ வெறிச்செயலிலோ ஈடுபட மாட்டோம் என்ற போது, அப்போது பாரதமும் கூட, வேண்டுகோளைப் பரிசீலித்தது. 

நான் மீண்டும் உங்களிடம் உரைக்கிறேன், நாம் பாகிஸ்தானத்தின் பயங்கரவாத, மற்றும் இராணுவ மையங்களின் மீது, நமது பதில் நடவடிக்கைகளை, இப்போது, நிறுத்தி மட்டும்,  வைத்திருக்கிறோம்.  இனிவரும் நாட்களிலே, நாம் பாகிஸ்தானத்தின் அனைத்து நடவடிக்கைகளையும், இந்த உரைகல்லில் உரைத்துப் பார்ப்போம், அவர்கள் ஒழுங்காக நடக்கிறார்களா என்றாய்வோம். 

நண்பர்களே, பாரதத்தின் முப்படைகளும், நமது விமானப்படை, நமது தரைப்படை, மற்றும் நமது கடற்படை, நமது எல்லையோரப் பாதுகாப்புப் படை, பி எஸ் எஃப், பாரதத்தின் ரிசர்வ் காவல் படை, தொடர்ந்து, விழிப்போடு இருக்கின்றன. 

துல்லியத் தாக்குதல், மற்றும் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, இப்போது, ஆப்பரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிராக, பாரதத்தின் கொள்கையாகும்.  ஆப்பரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்திற்கு எதிரான, போரிலே, ஒரு புதிய எல்லைக்கோட்டைக் கிழித்திருக்கிறது, ஒரு புதிய அளவுகோல், புதிய நிலையை தீர்மானம் செய்திருக்கிறது. 

முதலாவதாக, பாரதத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.  நாம் நமக்கு உகந்த வகையிலே, நாம் தீர்மானம் செய்து, கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.  எங்கெல்லாம் பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிப்படுகின்றதோ, அங்கெல்லாம் சென்று நாங்கள் பயங்கரமான நடவடிக்கையை மேற்கொள்வோம். 

இரண்டாவதாக, எந்த ஒரு அணு ஆயுத பயமுறுத்தலையும், பாரதம் பொறுத்துக் கொள்ளாது.  அணுஆயுத மிரட்டலில் தஞ்சம் புகுந்து தழைத்து வரும் பயங்கரவாத முகாம்களின் மீது, பாரதம் உறுதியான, மற்றும் தீர்மானமான தாக்குதலைத் தொடுக்கும். 

மூன்றாவதாக, நாம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம், மற்றும், பயங்கரவாதத் தலைவர்களையும், வேறுவேறாகப் பார்க்க மாட்டோம்.  ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைப்படி, உலகம், பாகிஸ்தான் பற்றிய இந்த வெறுக்கத்தக்க உண்மையை மீண்டும் கவனித்தது.  இறந்துபட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடந்த வேளையிலே, பாகிஸ்தானிய சேனையின் பெரிய பெரிய அதிகாரிகள் பங்கெடுத்துக் கொண்டார்கள். 

பயங்கரவாதத்திற்கு அதிகாரபூர்வ அங்கீகாரத்திற்கான, இது மிகப்பெரிய சான்றாகும்.  நாம் பாரதம், மற்றும் நமது குடிமக்களை, அனைத்து வகையான அபாயங்களிலிருந்தும் காப்பாற்ற, தொடர்ந்து தீர்மானமான முடிவுகளை எடுத்து வருவோம்.

நண்பர்களே, யுத்த களத்திலே நாம் ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானத்தை மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறோம்.  ஆனால் இந்த முறை, ஆப்பரேஷன் சிந்தூரோடு, ஒரு புதிய பரிமாணத்தை இணைத்திருக்கிறோம்.  நாம் பாலைவனங்களிலும் மலைகளிலும், நமது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம், அதோடு கூடவே, நவீனகால போர்முறைகளிலும் கூட, நமது திறமைகளை நிரூபித்திருக்கிறோம். 

இந்த ஆப்பரேஷன் செயல்பாட்டிலே, நமது இந்தியத் தயாரிப்பு ஆயுதங்களின் நம்பகத்தன்மை, நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  இன்று உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது, 21ஆம் நூற்றாண்டின் போர்முறையிலே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், இவற்றுக்கான வேளை வந்து விட்டது.

நண்பர்களே, அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கு எதிராக, நாமனைவரும், ஒன்றுபட்டு இருப்பது, நமது ஒற்றுமை, நமது மிகப்பெரிய சக்தியாகும்.  கண்டிப்பாகச் சொல்கிறேன், இந்த யுகம், யுத்தத்திற்கானது அல்ல, ஆனால், இந்த யுகம், பயங்கரவாதத்திற்கானதும் கிடையாது.  பயங்கரவாதத்திற்கு எதிராக, பூஜ்யம் சகிப்புத்தன்மை, இதுவே ஒரு சிறப்பான உலகிற்காக உத்திரவாதமாகும்.

நண்பர்களே, பாகிஸ்தானிய இராணுவம், பாகிஸ்தானிய அரசாங்கம், எந்த வகையிலே, பயங்கரவாதத்தை அரவணைத்து ஆதரிக்கிறதோ, அது என்றாவது ஒரு நாள், பாகிஸ்தானுக்கே முடிவு கட்டிவிடும்.  பாகிஸ்தானம் தப்பிக்க வேண்டும் என்றால், அது தனது, பயங்கரவாத கட்டமைப்புக்களை சுத்தமாக அகற்றியே ஆக வேண்டும். 

இதைத் தவிர, அமைதிக்கான வேறு எந்த வழியுமே இல்லை.  பாரதம் தனது முடிவில், தீர்மானமாக இருக்கின்றது, பயங்கரவாதம், மற்றும் பேச்சுவார்த்தை, ஒரே நேரத்தில் நடைபெற முடியாது.  பயங்கரவாதம், மற்றும் வர்த்தகம், ஒரே நேரத்தில் ஈடுபட முடியாது.   மேலும், தண்ணீர் மற்றும் ரத்தமும் கூட, ஒன்றாகப் பெருகியோட முடியாது.

நான் இன்று, உலக சமுதாயத்திடமும் கூற விரும்புகிறேன், எங்களுடைய வெளிப்படையான கொள்கை இதுதான், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் பற்றியதாகவே இருக்கும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரம், பி ஓ கே, இதைப் பற்றித் தான் இருக்கும். 

பிரியமான நாட்டுமக்களே,

இன்று புத்த பூர்ணிமை.  பகவான் புத்தர் நமக்கு, அமைதிக்கான பாதையைக் காட்டியிருக்கிறார். அமைதிக்கான பாதையும் கூட, சக்தியைக் கடந்து தான் பயணிக்கிறது.  மனித சமூகம், அமைதி மற்றும் நல்வளங்களை நோக்கிப் பயணிக்கட்டும்,

அனைத்து இந்தியர்களும் அமைதியுடன் வாழ வேண்டும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவுகளை நிறைவேற்ற வேண்டும், இதன் பொருட்டு, பாரதம் சக்தியுடையதாக ஆவது அவசியமானது, மேலும் தேவை ஏற்பட்டால், இந்த சக்தியைப் பயன்படுத்துவதும் அவசியமானதாகும்.  அதோடு கடந்த சில நாட்களிலே, பாரதம் இதைத் தான் செய்து காட்டியது.

நான் மீண்டும் ஒருமுறை, பாரதத்தின் சேனைகள், மற்றும் ஆயுதப்படைகளுக்கு, சல்யூட் செய்கிறேன்.  பாரதவாசிகளான நமது நம்பிக்கை, அனைத்து குடிமக்களின் ஒற்றுமைக்கான சபதம், சங்கல்பம், நான் இவற்றைப் போற்றுகிறேன்.

பலப்பல நன்றிகள்.

பாரத் மாதா கீ ஜய்
பாரத் மாதா கீ ஜய்
பாரத் மாதா கீ ஜய்.


பிரதமர் மோடியின் உரை : தமிழ்க் குரலில்…

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்! பிரதர் மோடியின் ஆவேச உரை! மே 12ம் தேதி இரவு ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடி ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் தமிழ் வடிவம்

தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

#ஆபரேஷன்_சிந்தூர் #narendramodi #operationsindoor #பிரதமர்மோடி #மோடி

#News_Videos #தினசரி_செய்திகள் #ஆபரேஷன்சிந்தூர் #breakingnews

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories