ஜாதியை வைத்தோ… மதத்தை வைத்தோ… தமிழர்களை பிரிக்க முடியாது : கனிமொழி எம்.பி பேச்சு! 

29598227 1304399909690702 3164091154735783673 n e1522601460643 - 2026

ஜாதியை  வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ தமிழர்களை பிரிக்க முடியாது என செங்கோட்டையில்  கனிமொழி  எம்.பி பேசினார்.

நெல்லை மாவட்டம்,  செங்கோட்டையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் தலைமையில்  மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியனின்  படத்  திறப்பு விழா இன்று நடைபெற்றது .

இந்த விழாவில்  சிறப்பு விருந்தினராக திமுக மாநில மகளீரணி அமைப்பாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு  ரத்தின வேல் பாண்டியனின்  படத்தை திறந்து வைத்து பேசியதாவது:- திராவிட இயக்கத்தின் அடிநாதமே சமூக நீதி ஆகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த பெருமை திராவிட இயக்கத்துக்குத்தான் உண்டு.

இந்தியா முழுவதிலும் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பிற்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு, அதனுடைய தலைவராக நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களை மத்திய அரசு நியமித்தது. அந்த அறிக்கை தான் மண்டல் கமிசனுடைய பரிந்துரைகளை மத்திய அரசு சட்டமாக்க வழி வகுத்தது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. அந்தவகையில் சமூக நீதி காத்தவர் ரத்தினவேல் பாண்டியன்.

மத்திய அரசு  தமிழக  அரசாங்கத்தை ஒரு பொம்மலாட்டம் போல்  ஆட்டி வைக்குறது. அதற்கு ஏற்றால் போல் இங்கு இருக்கும் முதலலமைச்சர் துணை முதலமைச்சரும்  சொல்வதற்கெல்லாம் தலையாட்டி  கொண்டு இருக்கிறார்கள் .நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுப்பதற்கு கூட மத்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்றே தமிழக அரசாங்கம் வழக்கு தொடுக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் இங்கு ஜாதியை  வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ ஊடுருவ நினைத்தால் நாங்கள் எல்லோரும் தமிழர்கள். தமிழால் ஒன்று பட்டவர்கள் அந்த  இன உணர்வு இருக்கும் வரை எங்களை மதத்தாலோ ஜாதியாலோ பிரிக்க முடியாது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories