December 5, 2025, 9:55 PM
26.6 C
Chennai

ஜாதியை வைத்தோ… மதத்தை வைத்தோ… தமிழர்களை பிரிக்க முடியாது : கனிமொழி எம்.பி பேச்சு! 

29598227 1304399909690702 3164091154735783673 n e1522601460643 - 2025

ஜாதியை  வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ தமிழர்களை பிரிக்க முடியாது என செங்கோட்டையில்  கனிமொழி  எம்.பி பேசினார்.

நெல்லை மாவட்டம்,  செங்கோட்டையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் தலைமையில்  மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியனின்  படத்  திறப்பு விழா இன்று நடைபெற்றது .

இந்த விழாவில்  சிறப்பு விருந்தினராக திமுக மாநில மகளீரணி அமைப்பாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு  ரத்தின வேல் பாண்டியனின்  படத்தை திறந்து வைத்து பேசியதாவது:- திராவிட இயக்கத்தின் அடிநாதமே சமூக நீதி ஆகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த பெருமை திராவிட இயக்கத்துக்குத்தான் உண்டு.

இந்தியா முழுவதிலும் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பிற்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு, அதனுடைய தலைவராக நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களை மத்திய அரசு நியமித்தது. அந்த அறிக்கை தான் மண்டல் கமிசனுடைய பரிந்துரைகளை மத்திய அரசு சட்டமாக்க வழி வகுத்தது.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. அந்தவகையில் சமூக நீதி காத்தவர் ரத்தினவேல் பாண்டியன்.

மத்திய அரசு  தமிழக  அரசாங்கத்தை ஒரு பொம்மலாட்டம் போல்  ஆட்டி வைக்குறது. அதற்கு ஏற்றால் போல் இங்கு இருக்கும் முதலலமைச்சர் துணை முதலமைச்சரும்  சொல்வதற்கெல்லாம் தலையாட்டி  கொண்டு இருக்கிறார்கள் .நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுப்பதற்கு கூட மத்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்றே தமிழக அரசாங்கம் வழக்கு தொடுக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் இங்கு ஜாதியை  வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ ஊடுருவ நினைத்தால் நாங்கள் எல்லோரும் தமிழர்கள். தமிழால் ஒன்று பட்டவர்கள் அந்த  இன உணர்வு இருக்கும் வரை எங்களை மதத்தாலோ ஜாதியாலோ பிரிக்க முடியாது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories