‘புலி’ படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு : நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்

Published:

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 1-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள் நேற்று முதலே திரையரங்குகளில் கட்-அவுட்கள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது என ‘புலி’ படத்தை வரவேற்க தொடங்கினர்.

அதேபோல், விஜய் படம் என்பதால், திரையரங்கு உரிமையாளர்களும் ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டன.

ஆனால், நேற்று இரவே ஒரு சில காரணங்களால் நிறைய திரையரங்குகளில் ‘புலி’ படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்துள்ளாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில திரையரங்குகள் 5 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்யவில்லை.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் திரையரங்கில் இன்று காலை 5 மணிக்கு ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்போவதாக அறிந்ததும், ரசிகர்கள் பட்டாளம் அந்த திரையரங்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த திரையரங்கிலும் ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்படவில்லை. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காலை 8 மணி சிறப்பு காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது

எனவே, படம் வெளிவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பகல் 12 மணிக்கு மேல் ‘புலி’ படம் வெளியாகும் என திரையரங்கு வட்டாரங்களில் கூறப்படுகிறது .

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img