December 6, 2025, 12:16 AM
26 C
Chennai

நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை : குடியரசுத் தலைவர் வருத்தம்

 
 
புது தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழாக் கொண்டாடங்களின் தொடக்க நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் 31-10-2015 நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்.
 
மேலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
 
நீதிபதிகள் நியமன முறை எதுவாக இருந்தாலும், அது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், நன்கு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்; நீதிபதிகள் நியமன நடைமுறையில் யாரும் தலையிட முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். மேலும், காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள, நீதித் துறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
 
 
ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் நீதித் துறையின் தன்னாட்சி அதிகாரம், ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகவும் திகழ்கிறது. நீதிபதிகள் நியமன முறை எதுவாக இருந்தாலும், அது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், நன்கு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். மேலும், நீதிபதிகள் நியமன நடைமுறையில் யாரும் தலையிட முடியாது. அதேசமயம், சுய பரிசோதனை மற்றும் தன்னார்வத் திருத்தங்கள் மூலம், நீதித் துறை காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
வழக்குகளுக்கு விரைவான தீர்வு: உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
 
இதேபோல், கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது வருந்தத்தக்க விஷயமாகும்.
 
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் வகையில், நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும். மேலும், நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி தேவைப்படுகிறது. நீதி வழங்கும் முறை, பொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும்.
பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: நாட்டில் ஜனநாயகம் செழித்து வளர ஒருமைப்பாடும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணிகளாக உள்ளன. இந்தியாவின் பழைமையான நாகரிகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது உயர்வான பண்புக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
 
பன்முகத்தன்மை நமது ஒட்டுமொத்த பலமாகத் திகழ்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், இதனை பிரதிபலிப்பதை நாம் அறிய முடியும். பல்வேறு காலகட்டங்களில் பல சோதனைகளைக் கடந்து வந்துள்ள பன்முகத்தன்மை எனும் நமது தனிச்சிறப்பை, எந்த விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய முறையை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்ச்சியில், நீதிபதிகள் நியமன முறை தொடர்பாக, பிரணாப் முகர்ஜி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ரோகிணி, தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories