அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருணாநிதி, ஸ்டாலின் கூறத் தயாரா.?

 
அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருணாநிதி, ஸ்டாலின் கூறத் தயாரா.? என்று மாநில வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சிமற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார் .
 
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அரசின் சாதனைகளை விளக்கியும், திமுகவினரின் அவதூறு பிரசாரங்களைக் கண்டித்தும் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
 
ஊழலைப் பற்றி பேச திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு அருகதை இல்லை .மத்தியில் செல்வாக்குடனும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த போது காவிரி நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணாத திமுக தலைவர் கருணாநிதி, அப்பிரச்னைக்குத் தீர்வு காணுவதாக பேசி வருகிறார். தமிழ் இனத்தை காப்பாற்றுவதாகக் கூறி கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றுபவர் தான் கருணாநிதி.
 
இன்று இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவதற்கு கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காணாததே காரணமாகும். இப்பிரச்னையைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர் கருணாநிதி.
 
அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக பொருளாளர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறுகிறார்.
எங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் கூறத் தயாரா.?
 
தமிழகத்தில் திமுகவினரால் அபகரிக்கப்பட்ட ரூ.3000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டுக் கொடுத்தவர் ஜெயலலிதா. உலக வங்கி, ஆசிய வங்கிகளே பாராட்டும் வகையில் தமிழகத்தில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருபவர் ஜெயலலிதா.
 
தமிழக மக்களை தம்மக்களாகக் கருதி, அவர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருபவர் ஜெயலலிதா. வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று வைத்திலிங்கம் கூறினார்.
 
நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமைக் கொறடாவும், மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான ஆர். மனோகரன் தலைமை வகித்தார். மாநில அமைச்சர் டி.பி.பூனாட்சி, அதிமுக கொள்கைபரப்புத் துணைச் செயலர் நாஞ்சில் சம்பத், மக்களவை உறுப்பினர் ப.குமார், திரைப்பட நடிகை விந்தியா ஆகியோர் பேசினர்.
 
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு. பரஞ்சோதி, சீ. வளர்மதி, மேயர் அ.ஜெயா, துணை மேயர் ஜெ.சீனிவாசன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் அமைச்சர் என். நல்லுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories