கருணாஸ் கைதை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும் பொதுச்செயலாளரருமான
கேப்டன் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
18619981 1931437010425309 5948584160048344634 n - 2026
நடிகரும், தற்போதைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில் பல பேர், பல கருத்துக்களை அவரவர்கள் நினைப்பதை போல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபமாக எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை பேசிவருவதும், காவல் துறையை தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதித்து பேசுவதும் என்று தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. பல உதாரணங்களை சமீப காலமாக பார்க்கமுடிகிறது. ஆனால் கருணாஸ் அவர்களை மட்டும் கைது செய்து, அக்டோபர் 5ம் தேதி வரைக்கும் காவலில் வைப்பது என்பது தவறான செயலாகும். அப்படி இவர் பேசியது தவறு என்று தமிழக அரசு முடிவெடுத்தால், சமீப காலமாக எத்தனையோ பேர் அவரவர் கருத்துக்களை தொடந்து பதியவைத்துள்ளார்கள் அவர்கள் மீது இந்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒரு சிலரை பழிவாங்கும் போக்கில் நடவடிக்கை எடுப்பதும், ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

மேலும் தண்டனை என்பது தவறு செய்பவர்கள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். தமிழக அரசாங்கம் என்பது அனைவருக்கும் நடுநிலையாக இருந்து நியாயமான ஒரு அரசாங்கமாக இருக்கவேண்டுமே தவிர, தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டு, ஆட்சியை தக்கவைப்பதற்காக தங்களுக்கு சாதகமாக செயல்படுத்துவது, இன்னொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணை வைத்து பார்க்கும் இந்த தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. தராசு மாதிரி சரிசமமாக தவறாக பேசுபவர்கள் யாராக இருந்ததாலும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories