December 7, 2025, 2:09 AM
25.6 C
Chennai

தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் வசூல் வேட்டை நடத்தும் கொள்ளையர்கள்

 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
 
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பெருத்த சேதத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.
 
இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வசூல் வேட்டை நடத்தி வயிறு வளர்த்து வரும் பல பணவெறி பிடித்த வசூல் வேட்டை கொள்ளையர்கள் தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் டுபாகூர் ரசீதை அச்சடித்து அதை கையில் எடுத்துக்கொண்டு வசூல் வேட்டை நடத்தி வருவதாக பரவலாக கூறப்படுகின்றது.
 
வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல் ஓடி ஒளிந்து தலைமறைவான கொள்ளையர்கள் தற்போது நாங்கள் உதவி செய்ய போகிறோம் என சொல்லுவதாக தெரிகிறது. மேலும் ஒரு சிலர் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்ப்பட்ட நட்பை தவறுதலாக பயன்படுத்தி வங்கி கணக்கை அறிவித்து பணம் அனுப்ப கோரிக்கை விடுத்து வசூல் வேட்டை நடத்த கூடும் .
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழக அரசு வழியாக நிதி உதவி செய்வதற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
மனித நேயத்துடன் உதவி செய்ய நினைப்போர் தமிழக அரசு அறிவித்துள்ள கீழ்கண்ட தகவல் படி அனுப்பி உதவலாம்.
 
காசோலை அல்லது வரைவேலை வழியாக பணம் அனுப்ப :-
 
‘The joint secretary & treasurer, Chief Minister’s Public relief fund, Finance department, Government of Tamilnadu, secretariat, Chennai 600009, Tamilnadu, India. எனும் முகவரிக்கு அனுப்பவும்.
 
உங்களுடைய வங்கி கணக்கை பயன்படுத்தி இணையதள (ECS) மூலமாக, தமிழக அரசு பணம் வங்கி கணக்கில் பணம் செலுத்த :-
 
Government of Tamilnadu,
S.B.A/c number: 117201000000070
Indian Overseas Bank, IFS code: IOBA0001172,
Secretariat Branch, Chennai – 600 009
CMPRF PAN: AAAGC0038F.
எனும் கணக்கில் செலுத்தலாம் .
 
நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வருமான வரியில் இருந்து 80-ஜி பிரிவின்கீழ் வரி விலக்கும் கிடைக்கலாம் .
 
தமிழக வெள்ள நிவாரண நிதி எனும் பெயரில் டுபாகூர் ரசீதை அச்சடித்து அதை கையில் எடுத்துக்கொண்டு உங்களை கட்டாயமாக பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்று வசூல் வேட்டை கொள்ளையர்கள் மிரட்டினால் எவ்விதமான
தயக்கமும் இல்லாமல் காவல் துறையின் அவசர தொலைபேசி எண் 100யை தொடர்பு கொண்டோ அல்லது உங்களுக்கு
அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories