February 23, 2026, 12:35 AM
26.7 C
Chennai

செய்தியாளர்களை விரட்டியடித்த தமிழக அரசு பி.ஆர்.ஓ.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றும் பாரதிதாசன் செய்தியாளர்களை விரட்டியடித்ததாகவும் மேலும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளது.

பாரதிதாசன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு பாலமாக செயல்பட வேண்டியவர்கள். அமைச்சர்கள், அதிகாரிகளின் அடிமையாக மாறிப் போனது வேதனையாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பி.ஆர்.ஒ பாரதிதாசனின் அட்டகாசம் எல்லைமீறி போய்க் கொண்டு இருக்கிறது. பாரதிதாசன் என்று மகனுக்கு ஏன் பெயர் வைத்தோம் என அவரது தந்தை வாகை. முத்தழகன் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

இரவு திமுக பொதுக்கூட்ட மேடைகளில் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் விமர்சனம் செய்து பேசினால்தான் அடுத்த நாள் வீட்டில் அடுப்பெறியும். அதாவது திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் வாகை. முத்தழகனின் மகன்தான் பாரதிதாசன்.

திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி
செய்த புண்ணியத்தில் பாரதிதாசன், உதவி பி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்டார். 2006-11 திமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் உதவி பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றும்போதே திமிராகப் பேசுவது வாடிக்கையாக இருந்தது. பலமுறை அதிகாரிகள் எச்சரித்தும் பாரதிதாசன் கவலைப்படவில்லை. அதிகப்பிரசங்கி என்று பெயரும் எடுத்தார் பாரதிதாசன்.

பாரதிதாசனின் தந்தை வாகை.முத்தழகனின் செயல்பாடுகள் சரியில்லை என்று மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திமுகவில் ஓரங்கட்டப்பட்டார். கலைஞர் காலில் விழுந்து கெஞ்சி, மீண்டும் மேடையில் பேசத் தொடங்கினார். “கனிமொழி முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர், அவர் ஏன் தமிழக முதலமைச்சராக வரக்கூடாது” என்று பேச, திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

திமுக.விலிருந்து நீக்கப்பட்ட வாகை. முத்தழகன், மதிமுகவில் ஐக்கியமானார். மதிமுகவில் தற்போது டம்மியாக முடங்கி உள்ளார். திமுக பேச்சாளர் மகன் பாரதிதாசன், அதிமுக ஆட்சியில் அதிகார மையத்தில் வலம் வருவதுதான் வேடிக்கையாக உள்ளது. பாரதிதாசனுடன், உதவி பி.ஆர்.ஓ., பி.ஆர்.ஓ., உதவி இயக்குநர்கள் இப்படி யார் பேசினாலும், அவர்கள் பேச்சை பதிவு செய்து கொள்வார்.

அதை உயர் அதிகாரிகளுக்கு போட்டு காட்டுவார். அதாவது செய்தித் துறை உயரதிகாரிகளுக்கு மாமா வேலை பார்க்கிறார். பாரதிதாசனுடன் தப்பித் தவறி உளறிய பி.ஆர்.ஓ.க்கள் டம்மி பதவியில் தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.

சேலத்தில் உதவி பி.ஆர்.ஓ. வாக பணியாற்றியபோது, சேலம் மாநகராட்சி துணை மேயர் மகளுடன் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மனசாட்சியை விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார் அண்ணன் பாரதிதாசன்.

தாம்பரம் நகராட்சியில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு வந்த பிறகு, அமைச்சர்கள் பேட்டி என்று நிருபர்கள் அழைக்கப்பட்டார்கள். நிருபர்கள் தாம்பரம் நகராட்சிக்கு சென்றவுடன் பார்த்தால், ஜெயா டிவி, தந்தி டிவிக்கு மட்டும் அமைச்சர்கள் பேட்டி கொடுத்துவிட்டார்கள்.

மற்ற நிருபர்கள் காத்திருந்தார்கள். பி.ஆர்.ஓ. பாரதிதாசனிடம், “என்ன சார் பேட்டின்னு வர சொன்னீங்க… ஒரு மணி நேரமாக நிற்கிறோம்” என்றவுடன் திமிராக “உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தாச்சு” என்று அலட்சியமாகக் கூறியபடி, “பேட்டி எல்லாம் கிடையாது. போங்க” என்று விரட்டியடித்தார் ஜால்ரா பாரதிதாசன்…

என வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories