செய்தியாளர்களை விரட்டியடித்த தமிழக அரசு பி.ஆர்.ஓ.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றும் பாரதிதாசன் செய்தியாளர்களை விரட்டியடித்ததாகவும் மேலும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளது.

பாரதிதாசன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு பாலமாக செயல்பட வேண்டியவர்கள். அமைச்சர்கள், அதிகாரிகளின் அடிமையாக மாறிப் போனது வேதனையாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பி.ஆர்.ஒ பாரதிதாசனின் அட்டகாசம் எல்லைமீறி போய்க் கொண்டு இருக்கிறது. பாரதிதாசன் என்று மகனுக்கு ஏன் பெயர் வைத்தோம் என அவரது தந்தை வாகை. முத்தழகன் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

இரவு திமுக பொதுக்கூட்ட மேடைகளில் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் விமர்சனம் செய்து பேசினால்தான் அடுத்த நாள் வீட்டில் அடுப்பெறியும். அதாவது திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் வாகை. முத்தழகனின் மகன்தான் பாரதிதாசன்.

திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி
செய்த புண்ணியத்தில் பாரதிதாசன், உதவி பி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்டார். 2006-11 திமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் உதவி பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றும்போதே திமிராகப் பேசுவது வாடிக்கையாக இருந்தது. பலமுறை அதிகாரிகள் எச்சரித்தும் பாரதிதாசன் கவலைப்படவில்லை. அதிகப்பிரசங்கி என்று பெயரும் எடுத்தார் பாரதிதாசன்.

பாரதிதாசனின் தந்தை வாகை.முத்தழகனின் செயல்பாடுகள் சரியில்லை என்று மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திமுகவில் ஓரங்கட்டப்பட்டார். கலைஞர் காலில் விழுந்து கெஞ்சி, மீண்டும் மேடையில் பேசத் தொடங்கினார். “கனிமொழி முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர், அவர் ஏன் தமிழக முதலமைச்சராக வரக்கூடாது” என்று பேச, திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

திமுக.விலிருந்து நீக்கப்பட்ட வாகை. முத்தழகன், மதிமுகவில் ஐக்கியமானார். மதிமுகவில் தற்போது டம்மியாக முடங்கி உள்ளார். திமுக பேச்சாளர் மகன் பாரதிதாசன், அதிமுக ஆட்சியில் அதிகார மையத்தில் வலம் வருவதுதான் வேடிக்கையாக உள்ளது. பாரதிதாசனுடன், உதவி பி.ஆர்.ஓ., பி.ஆர்.ஓ., உதவி இயக்குநர்கள் இப்படி யார் பேசினாலும், அவர்கள் பேச்சை பதிவு செய்து கொள்வார்.

அதை உயர் அதிகாரிகளுக்கு போட்டு காட்டுவார். அதாவது செய்தித் துறை உயரதிகாரிகளுக்கு மாமா வேலை பார்க்கிறார். பாரதிதாசனுடன் தப்பித் தவறி உளறிய பி.ஆர்.ஓ.க்கள் டம்மி பதவியில் தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.

சேலத்தில் உதவி பி.ஆர்.ஓ. வாக பணியாற்றியபோது, சேலம் மாநகராட்சி துணை மேயர் மகளுடன் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மனசாட்சியை விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார் அண்ணன் பாரதிதாசன்.

தாம்பரம் நகராட்சியில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு வந்த பிறகு, அமைச்சர்கள் பேட்டி என்று நிருபர்கள் அழைக்கப்பட்டார்கள். நிருபர்கள் தாம்பரம் நகராட்சிக்கு சென்றவுடன் பார்த்தால், ஜெயா டிவி, தந்தி டிவிக்கு மட்டும் அமைச்சர்கள் பேட்டி கொடுத்துவிட்டார்கள்.

மற்ற நிருபர்கள் காத்திருந்தார்கள். பி.ஆர்.ஓ. பாரதிதாசனிடம், “என்ன சார் பேட்டின்னு வர சொன்னீங்க… ஒரு மணி நேரமாக நிற்கிறோம்” என்றவுடன் திமிராக “உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தாச்சு” என்று அலட்சியமாகக் கூறியபடி, “பேட்டி எல்லாம் கிடையாது. போங்க” என்று விரட்டியடித்தார் ஜால்ரா பாரதிதாசன்…

என வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories