பதில் கொடுக்கும் துணிச்சல் உண்டா மு.க. ஸ்டாலினுக்கு?

Published:

சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன் வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடூரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழக அரசை நம்பி தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது அயோக்கியத்தனம் என பொதுமக்கள் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளப்பிய பிரச்சினை தற்போது தமிழகத்தில் ஒரு பக்கம் விஸ்ரூபமெடுத்து ஓடிக்கொண்டு உள்ளது.

images politics 20151207220742 - 2026ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து திமுக பொருளார் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நக்கல், நையாண்டி செய்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளில் பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அப்போதும் மு.கருணாநிதி மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் அவரது புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொண்டார். அவ்வாறு மு.கருணாநிதி புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது? என பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டியதிற்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததையும் கண்டித்துள்ளனர்.

பொதுமக்கள் பெரும்பாலோனர் சமூக ஊடகங்களில் மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பழைய புகைப்படங்களை நக்கல், நையாண்டி செய்து பதிவிட்டு அவர்களுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்து பல பதிவுகளை வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட தமிழக நலத் திட்டங்களில் மு.கருணாநிதி புகைப்படம் பதிவிடப்பட்டதை பாலாஜி இராமச்சந்திரன் என்பவர் அவரது முகநூல் பதிவில் மு.க. ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டி, “அரசு வரிப் பணத்துல போட்டோ போடலாமா ஸ்டாலின்? இதுமட்டும் உங்க அப்பன் வீட்டு பணமா?” என மு.க. ஸ்டாலினை கேள்வி எழுப்பும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

திமுக கட்சியின் “நமக்கு நாமே” எனும் திட்டத்தின் பெயரால் கடந்த சில வாரங்களுக்கு முன்வரை தமிழகத்தை வலம் வந்து பொதுமக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன்வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

images politics 20151209224854 - 2026

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img