December 6, 2025, 11:32 AM
26.8 C
Chennai

பதில் கொடுக்கும் துணிச்சல் உண்டா மு.க. ஸ்டாலினுக்கு?

சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன் வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடூரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழக அரசை நம்பி தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது அயோக்கியத்தனம் என பொதுமக்கள் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளப்பிய பிரச்சினை தற்போது தமிழகத்தில் ஒரு பக்கம் விஸ்ரூபமெடுத்து ஓடிக்கொண்டு உள்ளது.

images politics 20151207220742 - 2025ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து திமுக பொருளார் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நக்கல், நையாண்டி செய்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளில் பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார்.

அப்போதும் மு.கருணாநிதி மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் அவரது புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொண்டார். அவ்வாறு மு.கருணாநிதி புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது? என பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டியதிற்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததையும் கண்டித்துள்ளனர்.

பொதுமக்கள் பெரும்பாலோனர் சமூக ஊடகங்களில் மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பழைய புகைப்படங்களை நக்கல், நையாண்டி செய்து பதிவிட்டு அவர்களுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்து பல பதிவுகளை வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட தமிழக நலத் திட்டங்களில் மு.கருணாநிதி புகைப்படம் பதிவிடப்பட்டதை பாலாஜி இராமச்சந்திரன் என்பவர் அவரது முகநூல் பதிவில் மு.க. ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டி, “அரசு வரிப் பணத்துல போட்டோ போடலாமா ஸ்டாலின்? இதுமட்டும் உங்க அப்பன் வீட்டு பணமா?” என மு.க. ஸ்டாலினை கேள்வி எழுப்பும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திமுக கட்சியின் “நமக்கு நாமே” எனும் திட்டத்தின் பெயரால் கடந்த சில வாரங்களுக்கு முன்வரை தமிழகத்தை வலம் வந்து பொதுமக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன்வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

images politics 20151209224854 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories