December 6, 2025, 9:07 PM
25.6 C
Chennai

மீண்டும் மீண்டும் ‘மை வீச்சு’ நாடகம்: பாஜக., சதி காரணமாம்!

 

புது தில்லி,

தில்லியில் மீண்டும் மை வீச்சு நாடகம் அரங்கேறியது. இதற்கு பாஜக சதியே காரணம் என வழக்கம்போல் குற்றம் சாட்டினார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். கார்கள் ஓட்ட கட்டுப்பாடு விதித்த திட்டத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது பெண ஒருவர் மை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தில்லியில், வாகனங்களின் பெருக்கத்தால் காற்று மாசுபாடு அதிகரித்து விட்டது. எனவே, மாசுபாட்டை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை தில்லி மாநில அரசு அறிமுகப்படுத்தியது. ஒற்றைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும், இரட்டைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும் வேறு வேறு நாட்களில் இயக்கப்படுவதுதான் அந்த திட்டம். அத்திட்டத்தை பரீட்சார்த்தமாக 15 நாட்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த 1–ந் தேதி தொடங்கி, 15–ந் தேதி வரை திட்டம் அமலில் இருந்தது. இதனால் காற்று மாசுபாடும் குறைந்தது என்று கூறப்படுகிறது.

அந்த திட்டத்தின் வெற்றிக்காக தில்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி நேற்று நடத்தியது. சாத்ரசால் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய், தில்லி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இருப்பினும், அந்தக் கூட்டத்தில், அரவிந்த் கேஜ்ரிவால் பேசத் தொடங்கியபோது, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், போலீஸ் தடுப்புகளை மீறி திடீரென எழுந்து சென்று அரவிந்த் கேஜ்ரிவாலை நெருங்கி, அவர் மீது மை வீசினார். சில காகிதங்களையும் விசிறி அடித்தார்.

இந்தச் சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று, அந்தப் பெண்ணைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வந்தனர்.  விசாரணையில், அந்தப் பெண், தான் ‘ஆம் ஆத்மி சேனா’வைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி அதிருப்தியாளர்களால் துவக்கப்பட்ட அமைப்பு இது. அவர் ஒரு பஞ்சாபிப் பெண் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு வழக்கம்போல், பாஜக.,வின் சதி காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories