மீண்டும் மீண்டும் ‘மை வீச்சு’ நாடகம்: பாஜக., சதி காரணமாம்!

 

புது தில்லி,

தில்லியில் மீண்டும் மை வீச்சு நாடகம் அரங்கேறியது. இதற்கு பாஜக சதியே காரணம் என வழக்கம்போல் குற்றம் சாட்டினார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். கார்கள் ஓட்ட கட்டுப்பாடு விதித்த திட்டத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது பெண ஒருவர் மை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தில்லியில், வாகனங்களின் பெருக்கத்தால் காற்று மாசுபாடு அதிகரித்து விட்டது. எனவே, மாசுபாட்டை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை தில்லி மாநில அரசு அறிமுகப்படுத்தியது. ஒற்றைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும், இரட்டைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும் வேறு வேறு நாட்களில் இயக்கப்படுவதுதான் அந்த திட்டம். அத்திட்டத்தை பரீட்சார்த்தமாக 15 நாட்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த 1–ந் தேதி தொடங்கி, 15–ந் தேதி வரை திட்டம் அமலில் இருந்தது. இதனால் காற்று மாசுபாடும் குறைந்தது என்று கூறப்படுகிறது.

அந்த திட்டத்தின் வெற்றிக்காக தில்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி நேற்று நடத்தியது. சாத்ரசால் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய், தில்லி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இருப்பினும், அந்தக் கூட்டத்தில், அரவிந்த் கேஜ்ரிவால் பேசத் தொடங்கியபோது, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், போலீஸ் தடுப்புகளை மீறி திடீரென எழுந்து சென்று அரவிந்த் கேஜ்ரிவாலை நெருங்கி, அவர் மீது மை வீசினார். சில காகிதங்களையும் விசிறி அடித்தார்.

இந்தச் சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று, அந்தப் பெண்ணைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வந்தனர்.  விசாரணையில், அந்தப் பெண், தான் ‘ஆம் ஆத்மி சேனா’வைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி அதிருப்தியாளர்களால் துவக்கப்பட்ட அமைப்பு இது. அவர் ஒரு பஞ்சாபிப் பெண் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு வழக்கம்போல், பாஜக.,வின் சதி காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories