சபரிமலையில் மதம் பிடித்த யானை மிதித்து மூதாட்டி பலி

 

திருவனந்தபுரம்:

சபரிமலை கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் மகர விளக்கு ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஐயப்பனைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்து, தற்போது படி பூஜைகள் நடந்து வருகின்றன . நேற்று மாளிகைபுரத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வல்லபன் என்ற யானையை அலங்கரித்து நிறுத்தி இருந்தனர். அந்த நேரத்தில் டிராக்டர் ஒன்று அதிக சத்தத்துடன் வந்தது. அதன் சத்தத்தைக் கேட்டதும் யானை திடீரென மிரண்டு ஓட்டம் பிடித்தது. யானை பாகன் அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் அவரால் இயலவில்லை.

இந்நிலையில், யானை சன்னிதானத்தில் தறிகெட்டு ஓடியது. யானை மிரண்டு ஓடியதைக் கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்த இலகுமன்பாறையைச் சேர்ந்த மூதாட்டி பேபி (68) என்பவரை யானை மிதித்து, தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி , திருச்சூரைச் சேர்ந்த இருமோன்(44) என்பவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த ஆண்டு இந்த யானைக்கு மதம் பிடித்ததால் இந்த ஆண்டு சன்னிதானத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் எச்சரித்திருந்தும் யானையை அழைத்து வந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்தாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories