December 6, 2025, 8:59 AM
26.8 C
Chennai

சபரிமலையில் மதம் பிடித்த யானை மிதித்து மூதாட்டி பலி

 

திருவனந்தபுரம்:

சபரிமலை கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் மகர விளக்கு ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஐயப்பனைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்து, தற்போது படி பூஜைகள் நடந்து வருகின்றன . நேற்று மாளிகைபுரத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வல்லபன் என்ற யானையை அலங்கரித்து நிறுத்தி இருந்தனர். அந்த நேரத்தில் டிராக்டர் ஒன்று அதிக சத்தத்துடன் வந்தது. அதன் சத்தத்தைக் கேட்டதும் யானை திடீரென மிரண்டு ஓட்டம் பிடித்தது. யானை பாகன் அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் அவரால் இயலவில்லை.

இந்நிலையில், யானை சன்னிதானத்தில் தறிகெட்டு ஓடியது. யானை மிரண்டு ஓடியதைக் கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்த இலகுமன்பாறையைச் சேர்ந்த மூதாட்டி பேபி (68) என்பவரை யானை மிதித்து, தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி , திருச்சூரைச் சேர்ந்த இருமோன்(44) என்பவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த ஆண்டு இந்த யானைக்கு மதம் பிடித்ததால் இந்த ஆண்டு சன்னிதானத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் எச்சரித்திருந்தும் யானையை அழைத்து வந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்தாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories