சபரிமலையில் மதம் பிடித்த யானை மிதித்து மூதாட்டி பலி

 

திருவனந்தபுரம்:

சபரிமலை கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் மகர விளக்கு ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஐயப்பனைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்து, தற்போது படி பூஜைகள் நடந்து வருகின்றன . நேற்று மாளிகைபுரத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வல்லபன் என்ற யானையை அலங்கரித்து நிறுத்தி இருந்தனர். அந்த நேரத்தில் டிராக்டர் ஒன்று அதிக சத்தத்துடன் வந்தது. அதன் சத்தத்தைக் கேட்டதும் யானை திடீரென மிரண்டு ஓட்டம் பிடித்தது. யானை பாகன் அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் அவரால் இயலவில்லை.

இந்நிலையில், யானை சன்னிதானத்தில் தறிகெட்டு ஓடியது. யானை மிரண்டு ஓடியதைக் கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்த இலகுமன்பாறையைச் சேர்ந்த மூதாட்டி பேபி (68) என்பவரை யானை மிதித்து, தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி , திருச்சூரைச் சேர்ந்த இருமோன்(44) என்பவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த ஆண்டு இந்த யானைக்கு மதம் பிடித்ததால் இந்த ஆண்டு சன்னிதானத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் எச்சரித்திருந்தும் யானையை அழைத்து வந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்தாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories