நோயாளிகள் தொடர் மரணம் எதிரொலி : இந்திய மனநல மருத்துவர் அமெரிக்காவில் கைது

Published:

 
இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திர நாகரெட்டி அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்துக்கு உட்பட்ட கிளேட்டன் கவுண்டியில் உள்ள ஜோன்ஸ்போரா பகுதியில் மனநல மருத்துவராக பணியாற்றி வருபவர் .மேலும் நரேந்திர நாகரெட்டி அமெரிக்காவில் மருந்து ஆலை ஒன்றும் நடத்தி வருக்கிறார் . இவரிடம் சிகிச்சை பெற்ற 36 நோயாளிகள் தொடர்ந்து மரணம் அடைந்தனர்.
 
இதைத்தொடர்ந்து டாக்டர் நரேந்திர நாகரெட்டிக்கு எதிராக புகார்கள் குவிந்தன. புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு நியாயமற்ற காரணங்களுக்காக வழங்கியிருப்பதும் வழங்கியது கண்டறியப்பட்டது.
 
மேலும் இறந்த 12 நோயாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, இவர் அவர்களுக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளை வழங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் ஒபியேட், பென்சோடியாசெபைன் போன்ற மருந்துகளை கடந்த சில ஆண்டுகளாக இவர் தனது நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக வழங்கியதும் தெரியவந்தது.
 
இதனால் டாக்டர் நாகரெட்டிக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அவரது வீடு மற்றும் அலுவலகங்களை சோதனையிட்ட அதிகாரிகள், நாகரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்
ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img