பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் வகையில், தமிழக அரசு மற்றொரு திட்டமாக ‘‘அம்மா அழைப்பு மையம்’’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. எந்த குறையாக இருந்தாலும் எந்த இடத்தில் இருந்தும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அந்தக் குறை, சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
அதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, குறை கூறியவருக்கு பதிலளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.



