தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு! 2017ஐ விட 24% குறைவு!

accident capita - 2026

தமிழகத்தில் 2018ல் 12,216 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் இது, 2017ஐ விட 24% குறைவு என்றும் போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வண்ணம் இருந்தன குறிப்பாக, சரக்கு வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத்து மற்றும் தரமற்ற சாலைகள் ஆகியவற்றினால் பெரும்பாலான விபத்துக்கள் நேரிடுகிறது.

அதேபோல் மதுபோதையில் வாகனம் ஓட்டும் காரணத்தினாலும் அதிக விபத்துகள் அரங்கேறி வருகிறது கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர்

எனவே சாலை விபத்துக்களை தடுக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும்படி பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது

அதன் அடிப்படையில் அந்தந்த மாநில போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதேபோல் விபத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் கடுமையாக உயர்த்தப்பட்டது

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இது போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் தமிழகத்தில் கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 24 சதவீதம் குறைந்துள்ளது இதுகுறித்து தமிழக போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 65 ஆயிரத்து 562 சாலை விபத்துகள் நடந்துள்ளன

இதில் அதிகபட்சம் சென்னை நகரத்தில் 7259 விபத்துகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1176 விபத்துக்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 1237 திருநெல்வேலி மாவட்டத்தில் 2260 விபத்துக்களும் திருவாரூர் மாவட்டத்தில் 908 விபத்துகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 995 விபத்துகளும், கரூர் மாவட்டத்தில் 1097 விபத்துகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1216 விபத்துகளும் நடைபெற்றுள்ளன

அதே சமயம், கடந்த 2018ம் ஆண்டில் ஜனவரி-டிசம்பர் வரை சாலை விபத்துகள் குறைந்துள்ளது

அதன்படி அந்த ஆண்டில் 63 ஆயிரத்து 920 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.50 சதவீதம் குறைவாகும் 2017ம் ஆண்டில் அதிகபட்சம் சென்னை நகரத்தில் 7586 விபத்துக்களும் திருநெல்வேலியில் 2442 சாலை விபத்துக்களும் நடந்துள்ளன.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

அதேபோல் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டை விட 2018ல் 24.39 சதவீதம் குறைந்துள்ளது

2017 ஆம் ஆண்டில் மொத்தம் 16,157 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 2018ல் சாலை விபத்தால் 12,216 பேர் தான் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் எங்களது இலக்கில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். விரைவில் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2018ல் 503 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 2017 ல் 644 2017 ஆண்டை விட 27.89 சதவீதம் உயிரழப்பு குறைவு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories