உம்மன்சாண்டிக்கு எதிரான ஆதாரத்தை விரைவில் தாக்கல் செய்வேன்: சரிதா நாயர்

Published:

கண்ணூரில் 2 மோசடி வழக்குகள் தொடர்பாக கண்ணூர் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சரிதா நாயர் பேசுகையில், சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு 1.90 கோடி ரூபாய் பணம் கொடுத்தது உண்மைதான்.

அது பொய் என்றால், தான் புகார் கூறி இத்தனை நாட்கள் ஆன பிறகும் என் மீது உம்மன்சாண்டி வழக்கு தொடராதது ஏன்? தான் பணம் கொடுத்ததற்கு தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தும் டிஜிட்டலில் மாற்றி வைத்துள்ளேன்.

ஆதரங்களை விரைவில் விசாரணை கமிஷனில் அவற்றை தாக்கல் செய்வேன். நான் கூறிய அனைத்து புகார்களும் உண்மை என நிரூபிக்கும் வகையில் அந்த ஆதாரங்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

 

Related articles

Recent articles

spot_img