மகாமகத்தையொட்டி ரெயில்வே சார்பில் 13–ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.
திருச்சி–மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த 10 நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் சுமார் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதே போல் மயிலாடுதுறை–சென்னை மார்க்கத்தில் 6 லட்சம் பக்தர்கள் பயணித்துள்ளனர். 10 லட்சம் பக்தர்களை கையாண்ட வகையில் திருச்சி கோட்ட ரெயில்வே ரூ.1.50 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரெயில் வேயின் வணிக பிரிவு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


