ரயில்வே தண்டவாளம் அருகே பிணமாக மீட்கப்பட்ட மாணவிகள்: குடியாத்தத்தில் பரபரப்பு

வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் அருகில் மாணவிகள் இருவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப் பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

குடியாத்தத்தை அடுத்துள்ள காசிகுட்டையைச் சேர்ந்தவர் மணி அவரது மகள் புனிதவல்லி. 19 வயதுடைய புனிதவல்லி ஜங்காலப்பள்ளி அரசு பள்ளியில், 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்டை வீட்டைச் சேர்ந்த அருள் என்பவரின் மகள் சவுந்தர்யா 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு, தையல்பயிற்சி படித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர், பள்ளி முடிந்து, புனிதவல்லி வீட்டுக்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் புனிதவல்லியும், சவுந்தர்யாவும் வெளியே சென்றுள்ளனர். இரவு 10 மணி ஆகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் அவர்ளைத் தேடினர்.

ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இது குறித்து லத்தேரி காவல்நிலையத்தில் இரவு 11 மணியளவில் புகார் செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, 10.30 மணியளவில் கரசமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில், புனிதவல்லியும், சவுந்தர்யாவும் பிணமாகக் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தனர்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இது குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, காட்பாடி ரயில்வே காவல்துறையினர், ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெவிதித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலமாகக் கிடந்த அந்த இருவரிவ் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories