இந்தோனேசியாவை விபசாரமற்ற நாடாக மாற்றபடும்: அமைச்சர் அறிவிப்பு

Published:

இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சமூகநலத்துறை மந்திரி கோஃபிபா இந்தர் பரவான்ஸா தெரிவிக்கையில், ஜகர்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து விபசார விடுதிகளையும் காலி செய்து அதில் இருக்கும் பெண்களை வெளியேற்றும் நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடரும்.

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் மேலும் 100 சிகப்பு விளக்குப் பகுதிகள் காலி செய்யப்படும். 2019-ம் ஆண்டுக்குள் விபசாரமற்ற நாடாக இந்தோனேசியாவை அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Related articles

Recent articles

spot_img