ஆந்திராவில் நெல்லூர் பகுதியில் கங்காபட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்பற்றி அஜீத் விவரம் அறிந்தார். இதையடுத்து குடும்பத்துடன் நேரில் சென்று வழிபட முடிவு செய்தார்.
மனைவி ஷாலினியுடன் 2 தினங்களுக்கு முன் கங்காபட்டினம் சென்ற அஜீத் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அஜீத் வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நட்சத்திர ஓட்டல் எதிலும் தங்காமல் ஊரில் உள்ள ஒரு வீட்டில் ஷாலினியுடன் அஜீத் தங்கினார். கிராம மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு போட்டோ எடுக்க அனுமதி கேட்டனர். அவர்களுடன் நின்று புகைப்படத்துக்கு அஜீத் போஸ் தந்தார்.


